News August 6, 2025

‘மாபெரும் தமிழ்க் கனவு’ மீண்டும் தொடக்கம்

image

கல்லூரி மாணவர்களிடையே தமிழர் மரபை பரப்பும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சிகள் ஓராண்டு இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் தொடங்குகிறது. கோவை, திருப்பூர், சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவாரூர், ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்றும், நாளையும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 50-க்கும் மேற்பட்ட பல்துறை ஆளுமைகள், 200 கல்லூரிகள், 2 லட்சம் மாணவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.

Similar News

News November 7, 2025

நாளை சங்கடஹர சதுர்த்தி… நன்மைகள் என்னென்ன?

image

நாளை மதியம் 12.33 மணிக்கு சங்கடஹர சதுர்த்தி திதி தொடங்கி, மறுநாள் காலை 10.25 வரை இருக்கிறது. மாலை நேர வழிபாடு தான் சங்கடஹர சதுர்த்திக்கு உகந்தது என்பதால், நாளை மாலை விநாயகரை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். முக்கியமாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுவது சிறப்பானது. அருகம்புல் படைத்து வழிபட்டால் நோய்கள், கடன் தொல்லை உள்ளிட்ட பல பிரச்னைகள் நீங்கி விடும் என்பது நம்பிக்கை.

News November 7, 2025

செங்கோட்டையனுக்கு பின்னணியில் திமுக? நயினார்

image

செங்கோட்டையன் விவகாரத்தின் பின்னணியில் திமுக உள்ளதோ என்ற சந்தேகம் உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் பாஜகவில் யாரை பார்த்தார் என்ன பேசினார் என்ற தெளிவான தகவல் இல்லை என்றும் கூறியுள்ளார். மேலும் <<18224796>>6 பேர் சென்றதாக செங்கோட்டையன் கூறும்<<>> நிலையில் அவர்கள் யார் எனவும் நயினார் கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 7, 2025

மழைக்காலத்தில் வரும் பெரும் பிரச்னை; சரி செய்ய டிப்ஸ்

image

மழைக்காலத்தில் ஈரத்தில் நடப்பதால் கால் விரல்களின் இடுக்குகளில் சேற்றுப்புண் ஏற்படலாம். இது வந்தால், அரிப்பு, வலி என ஆளையே ஒருவழி செய்துவிடும். கவலையவிடுங்க. சேற்றுப்புண்ணை சீக்கிரமே சரிசெய்யலாம். இதற்கு, வேப்பிலையை அரைத்தோ (அ) வேப்ப எண்ணெயை காய்ச்சியோ புண்ணில் வைக்கலாம். இதனை தொடர்ந்து செய்துவர புண் சரியாகும், வலி நீங்கும். வலியில் இருந்து விடுதலை தரும் இத்தகவலை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!