News April 3, 2025
இறப்பிலும் பிரியாத பாசமலர்கள்…!

உடன் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியாக பேசுவது கூட இல்லை. ஆனால், தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருதன்(49) உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து, கதறி அழுத அவரது அக்கா புஷ்பம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News February 7, 2026
நடிகர் பொன்னம்பலத்திற்கு விஷம்.. பரிதாப நிலை

உடல்நலம் பாதிக்கப்பட்ட நடிகர் பொன்னம்பலம், தனது நிலைக்கு கூட பிறந்த அண்ணனே காரணம் என குற்றம்சாட்டியுள்ளார். குடும்ப பிரச்னையால் தன்னுடைய உதவியாளரை வைத்து ரசத்தில் குதிரை பொடியை கலந்து கொடுத்துவிட்டதாகவும், இதனால் 3 வருஷமாக பேதி ஏற்பட்டு உடம்பே வீணாகிவிட்டதாகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். மேலும் பீரில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்ததால் சிறுநீரகம் பாதிக்கப்பட்டதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.
News February 7, 2026
தவெகவில் செங்கோட்டையன் புறக்கணிப்பா? அருண்ராஜ்

தவெகவில் செங்கோட்டையனுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு அருண்ராஜ் விளக்கம் கொடுத்துள்ளார். தேர்தல் அறிக்கை குழுவில் KAS இல்லை என்பதால் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று அர்த்தம் இல்லை என அவர் விளக்கமளித்துள்ளார். தேர்தல் பிரச்சார குழுவில் KAS முக்கிய உறுப்பினராக உள்ளதாகவும், எல்லோருக்கும் தனித்தனி பொறுப்புகளை விஜய் கொடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News February 7, 2026
FLASH: தங்கம் விலை தடாலடியாக குறைந்தது

இந்த வார வர்த்தக முடிவில், ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹3,840 குறைந்திருப்பது நடுத்தர மக்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது. கடந்த வாரம் (ஜன.31) 22 கேரட் தங்கம் சவரன் ₹1,19,200-க்கு விற்பனையான நிலையில், தற்போது ₹1,15,360 ஆக சரிந்துள்ளது. இதேபோல், வெள்ளியும் கிலோவுக்கு ₹35,000 சரிந்துள்ளது. 1 கிராம் ₹285-க்கும் 1 கிலோ ₹2.85 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


