News April 3, 2025

இறப்பிலும் பிரியாத பாசமலர்கள்…!

image

உடன் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியாக பேசுவது கூட இல்லை. ஆனால், தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருதன்(49) உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து, கதறி அழுத அவரது அக்கா புஷ்பம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 4, 2025

மத நம்பிக்கையை தடுப்பது நல்லிணக்கமா? கோர்ட்

image

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் உத்தரவிற்கு எதிராக TN அரசின் மேல்முறையீடு வழக்கில் இன்றே தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதை விசாரித்த மதுரை கோர்ட், ஒரு மதத்தின் நம்பிக்கையை தடுப்பது எப்படி சமூக நல்லிணக்கமாகும் என கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், யாருக்கும் பாதிப்பு இல்லாமல் தீபம் ஏற்றுவதை ஏன் ஒரு தரப்பு தடுக்க வேண்டும் என கேட்ட நீதிபதிகள், இதுகுறித்து ஆலோசிக்க சென்றுள்ளனர்.

News December 4, 2025

பாமகவின் மாம்பழ சின்னம் முடக்கப்படுமா?

image

பாமகவும், மாம்பழ சின்னமும் யாருக்கு சொந்தம் என்ற வழக்கு டெல்லி HC-ல் நடந்துவருகிறது. பதவிக்காலம் முடிந்தும் அன்புமணியை தலைவர் என ECI அங்கீகரித்துள்ளதாக ராமதாஸ் தரப்பு சொல்கிறது. இதனால், இவ்வழக்கில் தற்போதைக்கு ஒரு முடிவு எட்டப்படவில்லை. ஒருவேளை தேர்தல் வரை இப்பிரச்னை தொடர்ந்தால் மாம்பழம் சின்னம் முடக்கப்படலாம் எனவும், இது இருதரப்புக்கும் பின்னடைவு என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News December 4, 2025

BREAKING: போஸ்டரை நீக்கினார் செங்கோட்டையன்

image

எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படத்துடன் கார்த்திகை தீப வாழ்த்து தெரிவித்து, நேற்று வெளியிட்ட பதிவை, செங்கோட்டையன் நீக்கியுள்ளார். குறிப்பாக, தவெக கொள்கை தலைவர்கள் உடன் எம்ஜிஆர், ஜெ., புகைப்படமும் இருந்தது. இதனையடுத்து, தவெக கொள்கை தலைவர் ஜெ.,வா என்று பலரும் கேள்வி எழுப்பினர். இது அரசியல் ரீதியாக சர்ச்சையானதை உணர்ந்த KAS, இன்று அந்த போஸ்டரை நீக்கியுள்ளார்.

error: Content is protected !!