News April 3, 2025
இறப்பிலும் பிரியாத பாசமலர்கள்…!

உடன் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியாக பேசுவது கூட இல்லை. ஆனால், தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருதன்(49) உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து, கதறி அழுத அவரது அக்கா புஷ்பம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 5, 2026
பொங்கலுக்கு டிரெயின்ல போறீங்களா: இது தெரியுமா?

பொங்கல் சீசனில் சொந்த ஊருக்கு செல்ல ரயில்களே ஃபர்ஸ்ட் சாய்ஸ். அப்படி டிக்கெட் புக் பண்ணிட்டு, டிக்கெட்டின் PNR ஸ்டேட்டஸ், என்ன உணவு ஆர்டர், ரயில் அட்டவணை என அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியாம தவிக்குறீங்களா? இதற்காகவே ‘Railofy’ என்ற சேவை உள்ளது. 9881193322 என்ற எண்ணிற்கு Whatsapp-ல் ‘Hi’ என மெசேஜ் பண்ணுங்க. உங்க டிக்கெட் ஸ்டேட்டஸ் மொத்தமும் வந்துவிடும். யூஸ் பண்ணிக்கோங்க மக்களே.. SHARE IT.
News January 5, 2026
திமுகவுக்கு 90 நாள்கள் தான் இருக்கு: அண்ணாமலை

505 வாக்குறுதிகளில் 50-ஐக் கூட நிறைவேற்றாத CM, 80% பணிகளை முடித்துவிட்டதாக பொய் சொல்வதாக அண்ணாமலை கூறியுள்ளார். அது உண்மை என்றால், ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றப்பட்ட தேதியை அரசால் வெளியிட முடியுமா என்ற அவர், TN-ல் எங்கு சென்றாலும், இந்த ஆட்சி எப்போது அகலும் என்ற பேச்சுதான் மேலோங்கியுள்ளது என விமர்சித்துள்ளார். மேலும், திமுகவுக்கு இன்னும் 90 நாள்கள்தான் மிச்சமுள்ளது எனவும் பேசியுள்ளார்.
News January 5, 2026
திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு மொத்தம் ₹5000

திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை மொத்தம் (5 ஆண்டுகளில்) பொங்கல் பரிசாக ₹5000-ஐ முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆம்! 2022-ல் பொங்கல் தொகுப்பு (பணம் இல்லை), 2023 மற்றும் 2024-ல் பொங்கல் தொகுப்புடன் தலா ₹1000 வழங்கப்பட்ட நிலையில், 2025-ல் பொங்கல் தொகுப்பு (பணம் இல்லை) மட்டுமே வழங்கப்பட்டது. தற்போது 2026-ல் பொங்கல் தொகுப்புடன் ₹3000 என மொத்தம் ₹5000 அறிவிக்கப்பட்டுள்ளது..


