News April 3, 2025
இறப்பிலும் பிரியாத பாசமலர்கள்…!

உடன் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியாக பேசுவது கூட இல்லை. ஆனால், தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருதன்(49) உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து, கதறி அழுத அவரது அக்கா புஷ்பம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 7, 2025
சத்து நிறைந்த 5 முளைகட்டிய பயிர்கள்

முளைகள் என்பவை விதைகளில் இருந்து முளைத்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இளம்பயிர்கள். இதனை, வீடுகளில் எளிதில் பயிரிடலாம். உடலுக்கு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் முளைகட்டிய பயிர்கள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த முளைகட்டிய பயிர்களை, கமெண்ட்ல சொல்லுங்க.
News December 7, 2025
7 மணி நேரத்திற்கு கம்மியா தூங்குறீங்களா? உஷார்

ஒவ்வொருவரும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்க வேண்டும். இல்லையெனில் குறைந்த தூக்கம், ஆரோக்கியத்தை சிதைத்து, நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என்று டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். முக்கியமாக *இதய நோய்கள், பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கும் *நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகிறது *எடை அதிகரிக்கும் *நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடையும் *மன அழுத்தம், கவனம் சிதறுதல் போன்ற பிரச்னைகளும் அதிகரிக்கும்.
News December 6, 2025
ROKO❤️❤️ இன்றி எதுவும் சாத்தியமில்லை

டெஸ்ட் தொடரை இழந்த வருத்தத்தில் இருந்து, இந்திய ரசிகர்களுக்கு ROKO ஜோடி பெரும் கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது. SA ODI தொடரில் ரோஹித் 2 அரை சதங்களுடன் 146 ரன்களையும், விராட் 2 சதம் ஒரு அரைசதத்துடன் 302 ரன்களையும் குவித்துள்ளனர். SA-வின் வலுவான பேட்டிங்கிற்கு, பதிலடி கொடுக்க இருவரின் ஆட்டமே முக்கிய பங்காற்றியுள்ளது. 2027 உலகக் கோப்பையை ROKO இன்றி யோசிக்க முடியாத அளவிற்கு விளையாடியுள்ளனர்.


