News April 3, 2025
இறப்பிலும் பிரியாத பாசமலர்கள்…!

உடன் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியாக பேசுவது கூட இல்லை. ஆனால், தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருதன்(49) உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து, கதறி அழுத அவரது அக்கா புஷ்பம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News December 1, 2025
புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோ? வெளியான புது அப்டேட்

புதுச்சேரியில் விஜய்யின் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்டு தொடர்ந்து 3-வது நாளாக DGP அலுவலகத்தை புஸ்ஸி ஆனந்த் நாடியுள்ளார். நேற்று அலுவலகத்தை விட்டு வெளியே சென்றபோது எதுவும் பேசாமல் சென்ற அவர், தற்போது, நாளை மீண்டும் ஆலோசனைக்கு பிறகு முடிவு தெரியும் என அப்டேட் கொடுத்துள்ளார். வரும் 5-ம் தேதி புதுச்சேரியின் காலாப்பட்டு முதல் கன்னிக்கோவில் வரை விஜய்யின் ரோடு ஷோவை நடத்த தவெக திட்டமிட்டுள்ளது.
News December 1, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை… வந்தது HAPPY NEWS

மகளிர் உரிமைத் தொகை குறித்த மகிழ்ச்சியான அப்டேட் வெளியாகியுள்ளது. புதிதாக இணைந்தவர்களின் விவரம் இந்த வாரம் வெளியாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டிச.15 முதல் அவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 வழங்கப்பட உள்ளது. புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் வ<<18422492>>ங்கிக் கணக்கு விவரங்களை<<>> அரசு அதிகாரிகள் சரிபார்த்து வருகின்றனர். தவறான வங்கிக் கணக்கிற்கு பணம் செல்லக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது.
News December 1, 2025
நவம்பர் GST வசூல் ₹1.70 லட்சம் கோடி

அக்டோபரில் ₹1.95 லட்சம் கோடியாக வசூலான GST, நவம்பரில் ₹1.70 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. மேலும், CGST கடந்த ஆண்டு நவம்பரோடு ஒப்பிடுகையில், ₹34,141 கோடியில் இருந்து ₹34,843 கோடியாக அதிகரித்துள்ளது. இருப்பினும், SGST வசூல் ₹43,047 கோடியிலிருந்து ₹42,522 கோடியாக குறைந்துள்ளது. அதேபோல், IGST வசூல் ₹50,093 கோடியிலிருந்து ₹46,934 கோடியாக குறைந்துள்ளது.


