News April 3, 2025

இறப்பிலும் பிரியாத பாசமலர்கள்…!

image

உடன் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியாக பேசுவது கூட இல்லை. ஆனால், தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருதன்(49) உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து, கதறி அழுத அவரது அக்கா புஷ்பம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 28, 2025

பராசக்தி பட நடிகை காலமானார்

image

‘ஓ ரசிக்கும் சீமானே, ஆடுவோமே பள்ளு பாடுவோமே’ உள்ளிட்ட பாடல்களை கேட்காதவர்களும், குமாரி கமலாவின்(91) ஆட்டத்தை ரசிக்காதவர்களும் இருக்க முடியாது. 70 ஆண்டுகளுக்கு முன்பே PAN INDIA ஸ்டாராக திகழ்ந்த அவர், பராசக்தி, பாவை விளக்கு உள்பட 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனது நடனத்தால் பல மொழிகளில் ரசிகர்களை சம்பாதித்த கமலா, இறுதி காலத்தை அமெரிக்காவில் கழித்த நிலையில் வயது மூப்பால் காலமானார்.

News November 28, 2025

இலங்கை மீட்பு பணியில் இந்திய ஹெலிகாப்டர்கள்

image

<<18410040>>இலங்கை<<>> கனமழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு பணிகளில் இந்தியாவின் ஹெலிகாப்டர்கள் ஈடுபட உள்ளன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட உதவுமாறு இலங்கை கோரிக்கை விடுத்திருந்தது. இதை ஏற்றுள்ள இந்தியா, கொழும்புவில் நிறுத்தப்பட்டுள்ள INS Vikrant போர் கப்பலில் இருந்து ஹெலிகாப்டர்களை மீட்பு பணிக்காக அனுப்ப உள்ளது.

News November 28, 2025

உங்க குழந்தைகள் அதிகம் போன் பார்க்கிறார்களா?

image

குழந்தைகள் தற்போது ஸ்மார்ட்போன் அதிகம் பயன்படுத்துகின்றனர். தூங்காமல் கூட ரீல்ஸ் பார்க்கின்றனர். இது அவர்களின் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும், பார்வை பாதிப்பு, மனநிலை மாற்றம், நரம்பியல் பிரச்னைகளும் ஏற்படலாம். இதனை தடுக்க, 6-12 வயது பிள்ளைகள் குறைந்தது 9 மணி நேரம் தூங்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த முக்கிய தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!