News April 3, 2025
இறப்பிலும் பிரியாத பாசமலர்கள்…!

உடன் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியாக பேசுவது கூட இல்லை. ஆனால், தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருதன்(49) உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து, கதறி அழுத அவரது அக்கா புஷ்பம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News September 18, 2025
₹3.5 கோடி கடனில் இருக்கிறேன்: அண்ணாமலை

தனக்கு ₹3.5 கோடி கடன் இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். சொந்தமாக சம்பாதித்து விவசாய நிலம் வாங்கினால் கூட விளக்கம் கொடுக்க வேண்டியிருப்பதாகவும், நிலத்தின் சந்தை மதிப்பை விட அதிக விலைக்கே வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். நிலம் வாங்கிய விஷயத்தில் எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அண்ணாமலை, வேண்டுமென்றால் திமுக அரசு DVAC அனுப்பி சோதனை நடத்தட்டும் என்று சவால் விடுத்தார்.
News September 18, 2025
மியூசிக் டைரக்டர் Pick-லும் விஜய் கில்லி தான்: விஜய் ஆண்டனி

வேட்டைக்காரன், வேலாயுதம் ஆகிய படங்களுக்கு மட்டுமே விஜய் தன்னை இசையமைக்க பரிந்துரைத்தார் என்று விஜய் ஆண்டனி கூறியுள்ளார். மேலும், ஒவ்வொரு படத்திற்கும் இசையமைப்பாளர்களை தேர்ந்தெடுப்பதில் விஜய் சிறப்பாக செயல்படுவார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், வேட்டைக்காரன் படத்தில் ஷங்கர் M, சுசித்ராவை பாட வைத்தால் நன்றாக இருக்கும் என்று விஜய்யே பரிந்துரைத்ததாகவும், அது ஹிட் ஆனதாகவும் பகிர்ந்துள்ளார்.
News September 18, 2025
உங்க தூக்கத்த கெடுத்தது யாரு?

‘படுத்த உடனே தூங்குறதுக்கு குடுத்து வச்சிருக்கணும்’ என்று உங்களை பார்த்து ஒருவர் கூறினால், நீங்கள்தான் இன்று அதிர்ஷ்டசாலி. ஏனென்றால், இரவில் தூக்கம் வராமல் பலரும் அவதிப்படுகின்றனர். இதற்கு மதிய நேர குட்டி தூக்கம் ஒரு காரணமாக அறியப்பட்டாலும், வேறு சில காரணங்களும் உள்ளன. அவற்றில் முக்கியமான 5 காரணங்களை மேலே உள்ள படங்களில் Swipe செய்து பாருங்கள். நீங்கள் சந்திக்கும் இடர்களை கமெண்ட்டில் சொல்லுங்கள்.