News April 3, 2025

இறப்பிலும் பிரியாத பாசமலர்கள்…!

image

உடன் பிறந்தவர்கள் ஒரு கட்டத்திற்கு பிறகு சரியாக பேசுவது கூட இல்லை. ஆனால், தம்பி இறந்த துக்கத்தில் அக்காவும் உயிரை விட்ட சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் நடந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருதன்(49) உயிரிழந்துள்ளார். இதனை அறிந்து, கதறி அழுத அவரது அக்கா புஷ்பம் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இருவரின் உடல்களையும் ஒரே நேரத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Similar News

News December 5, 2025

BREAKING: தங்கம் விலை மீண்டும் குறைந்தது

image

தங்கம் விலை தொடர்ந்து 2-வது நாளாக குறைந்தது. இன்று(டிச.5) 22 கேரட் தங்கம் 1 கிராமுக்கு ₹20 குறைந்து ₹12,000-க்கும், சவரன் ₹160 குறைந்து ₹96,000-க்கும் விற்பனையாகிறது. நேற்று சவரனுக்கு ₹320 குறைந்த நிலையில், இன்று மீண்டும் சரிவைக் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் நிலவும் மந்த நிலையே தங்கம் விலை சரிவுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News December 5, 2025

ஆரம்ப கால ஜெயலலிதாவின் அரிய PHOTOS

image

மறைந்த Ex CM ஜெ.ஜெயலலிதாவின் 9-ம் ஆண்டு நினைவு தினம் இன்று (டிச.5) அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், அவரது ஆரம்பகால அரசியல் வாழ்கையை, அதிமுகவினர், புகைப்படங்களாக பகிர்ந்து நினைவுகூர்ந்துள்ளனர். இதுதொடர்பான சில போட்டோக்களை, மேலே உங்களுக்காக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE IT.

News December 5, 2025

கைதாகும் ஷேக் ஹசீனாவின் மகன்

image

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வஜித் ஜாய்க்கு எதிராக, அந்நாட்டின் குற்றவியல் தீர்ப்பாயம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் இளைஞர்கள் போராட்டம் வெடித்த போது, இணைய சேவைகளை தடைசெய்த குற்றத்துக்காக இந்நடவடிக்கையை எடுப்பதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இதே வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!