News November 29, 2024
தமிழர்களின் கனவுக்கு சட்ட அங்கீகாரம் உள்ளது

தமிழர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்புள்ளது. உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி உள்ளதாக சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹவால் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, மாநில மொழிகளை ஹைகோர்ட்களில் பயன்படுத்த ஆளுநர் அனுமதி அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இது அமலானால் எளிய மனிதர்களும் கோர்ட் விவகாரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
Similar News
News April 26, 2025
கார் குண்டுவெடிப்பு.. ரஷ்ய ராணுவ தளபதி பலி

ரஷ்ய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக், கார் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டுள்ளார். மாஸ்கோ அருகே குடியிருப்புப் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக உக்ரைன் தரப்பில் எந்த தகவலும் கூறப்படவில்லை. உக்ரைன் உடனான போர் நிறுத்தம் குறித்து ரஷ்ய அதிபர் புடினை சந்திக்க அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காப் திட்டமிட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
News April 26, 2025
ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு.. மக்கள் ஏமாற்றம்

ரேஷன் கடைகளில் கோதுமை தட்டுப்பாடு நிலவுவதால், மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தமிழகத்திற்கு பிப். வரை 1.71 கோடி கிலோ கோதுமையை மத்திய அரசு வழங்கியது. தற்போது அதை 85.76 லட்சம் கிலோவாக குறைத்துள்ளது. இதனால் 1,000 அட்டைகள் கொண்ட ரேஷன் கடைகளுக்கு கூட வெறும் 300 கிலோ கோதுமையே அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கோதுமை கிடைக்காமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
News April 26, 2025
சிகரெட்ட விட Danger.. இதனால் 13 வகை கேன்சர் வரலாம்!

சிகரெட், மதுவால், புற்றுநோய் பாதிப்பு வருவது தெரிந்ததே. ஆனால், உடல் பருமனாக இருப்பதால், 13 வகையான புற்றுநோயை வரும் என்பது தெரியுமா? மார்பகம், பெருங்குடல், எண்டோமெட்ரியம் (கருப்பையின் உட்புற திசு), உணவுக்குழாய், பித்தப்பை, இரைப்பை, சிறுநீரகம், கல்லீரல், கருப்பை, கணைய, தைராய்டு, எலும்பு மஜ்ஜை மற்றும் மெனிங்கியோமா ஆகியவற்றில் புற்றுநோய் ஏற்படலாம். ஆகவே உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளுங்கள்.