News November 29, 2024
தமிழர்களின் கனவுக்கு சட்ட அங்கீகாரம் உள்ளது

தமிழர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்புள்ளது. உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி உள்ளதாக சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹவால் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, மாநில மொழிகளை ஹைகோர்ட்களில் பயன்படுத்த ஆளுநர் அனுமதி அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இது அமலானால் எளிய மனிதர்களும் கோர்ட் விவகாரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
Similar News
News August 20, 2025
அப்பாவை அசைக்க முடியாது: ஸ்ருதி உறுதி

‘தக் லைஃப்’ தோல்வி கமல்ஹாசனை பாதிக்கவில்லை என அவரது மகள் ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார். சினிமாவில் வெற்றி, தோல்வி என தனது தந்தை நிறைய பார்த்தவர் எனவும், சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை மீண்டும் சினிமாவில்தான் போடுவதாகவும் அவர் கூறியுள்ளார். அதனால், இந்த நம்பர் கேம் ஒருபோதும் தந்தையை பாதிக்காது என தெரிவித்துள்ளார். ‘இந்தியன் 2’, ‘தக் லைஃப்’ என கமலின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்துள்ளன.
News August 20, 2025
புதிய சட்ட மசோதா நிறைவேற வாய்ப்புள்ளதா?

இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலான <<17459383>>புதிய சட்ட மசோதா<<>>, ஒரு அரசியலைப்பு சட்டத்திருத்தம் ஆகும். ஆகவே, இதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மை (லோக் சபாவில் 362 எம்பிக்கள்) தேவை. NDA-வுக்கு 293 எம்பிக்கள் உள்ளனர். ராஜ்ய சபாவில் 164 எம்பிக்கள் தேவையென்ற நிலையில் NDA-வுக்கு 125 பேர் தான் உள்ளனர். இருந்தும் இந்த மசோதாவை பாஜக கொண்டு வந்துள்ளது. பாஜகவின் திட்டம் என்ன? எதிர்க்கட்சிகள் என்ன செய்யும்?
News August 20, 2025
BREAKING: வீட்டுக்கடன்… நிதி நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு

வீட்டுக்கடன் வழங்கும் நிதிநிறுவனங்கள், கடன் மதிப்பு விதிமுறைகளை மீறுவதால், கடன்களை கண்காணிக்க NHB(National Housing Bank) திட்டமிட்டுள்ளது. கஸ்டமர்களின் செக்யூரிட்டி ஆவணங்களில் LTV(Loan-to-Value) 75% இருக்கலாம் என்ற விதியை மீறி, சில வங்கிகள் 95% கடன் வழங்குவது தெரியவந்துள்ளது. NHB கண்காணிப்பின் வளையத்திற்குள் இந்நிறுவனங்கள் வந்துள்ளதால், புதிதாக வீட்டுக்கடன் பெறுவோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.