News November 29, 2024

தமிழர்களின் கனவுக்கு சட்ட அங்கீகாரம் உள்ளது

image

தமிழர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேற வாய்ப்புள்ளது. உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை பயன்படுத்த சட்டப்பூர்வ அனுமதி உள்ளதாக சட்டத்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மெஹவால் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்று, மாநில மொழிகளை ஹைகோர்ட்களில் பயன்படுத்த ஆளுநர் அனுமதி அளிக்கலாம் என்றும் கூறியுள்ளார். இது அமலானால் எளிய மனிதர்களும் கோர்ட் விவகாரங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

Similar News

News November 12, 2025

டெல்லி போலீசுக்கு மீண்டும் அலர்ட்

image

டெல்லி கார் வெடிப்பு தொடர்பாக அம்மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும், சோதனைச் சாவடிகளுக்கும் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளிடம் இருந்த மற்றொரு கார் சிவப்பு நிற Ford Eco Sport என்று அடையாளம் காணப்பட்டு, அதை விரைந்து கண்டுபிடிக்க டெல்லி போலீஸ் மற்றும் அண்டை மாநில போலீசுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே அந்த காரை கண்டுபிடிக்க<<18265447>> 5 போலீஸ் குழு<<>> அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News November 12, 2025

கார் வெடிப்பு பின்னணியில் துருக்கி பயங்கரவாதிகளா?

image

டெல்லி கார் வெடிப்புக்கு துருக்கியில் வைத்து திட்டமிட்டதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சதித்திட்டத்தை அரங்கேற்றிய டாக்டர் உமர் மற்றும் கூட்டாளி முசாமில், துருக்கியில் ஜெய்ஸ் இ முகமது ஏஜென்டை சந்தித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பாஸ்போர்ட்டை கைப்பற்றியதன் மூலம் இத்தகவல்கள் கிடைத்துள்ளன. துருக்கி, சில வருடங்களாக பாக்., ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

News November 12, 2025

மோடி அரசின் கருவி தேர்தல் ஆணையம்: அப்பாவு

image

பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன் SIR பணி நடந்ததற்கும் இப்போது நடப்பதற்கும் வித்தியாசம் உள்ளதாக சபாநாயகர் அப்பாவு குற்றம்சாட்டியுள்ளார். தேர்தல் ஆணையம் நடுநிலைமையை தவறவிட்டதாக குற்றம்சாட்டிய அவர், PM மோடியின் ஆணையை ஏற்று நடக்கும் அமைப்பாக அது மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். பாஜக ஆட்சிக்கு முன்பு ECI எந்த ஒரு சார்பும் இல்லாத அமைப்பாக இருந்ததாகவும் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!