News October 20, 2025
ODI போட்டியில் நடந்த மிகப்பெரிய Error!

இந்தியாவுக்கு எதிரான முதல் ODI-யில் 176.5 Kph வேகத்தில் ஆஸி.,யின் மிட்சல் ஸ்டார்க் பந்து வீசியதாக கூறப்பட்டது. இதன்மூலம், அதிவேகமாக பந்துவீசிய சோயப் அக்தரின்(161.3Kph) சாதனையை முறியடித்தார் என பாராட்டப்பட்டார். ஆனால் உண்மையில் அவர் அவ்வளவு வேகமாக பந்து வீசவில்லையாம். இது தொழில்நுட்பக் கோளாறால் நடந்த தவறு எனவும் அவர் 140.8 kmph வேகத்தில்தான் பந்துவீசினார் என்றும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 20, 2025
தீபாவளி நாளில் அண்ணாமலை வைத்த கோரிக்கை

எத்திக்கும் இருள் அகன்று, ஒளி பெருகித் தித்திக்கும் தீபாவளி திருநாளில் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் என்று X-ல் அண்ணாமலை தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நன்னாளில் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகி நிறைந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் என்று வாழ்த்திய அவர், அனைவரும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் தீபாவளியை கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
News October 20, 2025
ஒரே ஆண்டில் ₹50,000 வரை விலை உயர்ந்த ஜரிகை!

தங்கம், வெள்ளியை தொடர்ந்து பட்டு சேலைகள் சாமானிய மக்களுக்கு எட்டாக் கனியாக மாறியுள்ளது. ஜரிகை உற்பத்திக்கு, தங்கமும், வெள்ளியும் முக்கிய மூலப்பொருட்களாக உள்ளன. எனவே, ஜரிகையின் விலையும் ஒரே ஆண்டில் ₹50,000 வரை உயர்ந்துள்ளது. கடந்தாண்டு ஏப்ரலில் ₹85,000-மாக இருந்த 1 கிலோ ஜரிகையின் விலை, தற்போது ₹1.35 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த தீபாவளிக்கு நீங்க பட்டு சேலை வாங்குனீங்களா?
News October 20, 2025
மழைக்கு கடந்த 18 நாள்களில் 20 பேர் பலியான சோகம்

மழையால் கடந்த 18 நாள்களில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக TN அரசு அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அக்.1 – 18-ம் தேதி வரை கடலூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் 10 பெண்கள், 8 ஆண்கள், 2 குழந்தைகள் என மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயமடைந்துள்ளனர். மழையால் 435 குடிசை வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.