News March 22, 2024
2ஜி வழக்கு: கடந்து வந்த பாதை (2)

➤2008 அக் 20: டாடா போன்ற நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை ஈடிசாலட், டோகோமோ போன்ற நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தன. ➤2009 நவ 20: ஒதுக்கீட்டில் கார்ப்பரேட்களின் தலையீடு இருந்ததை IT உறுதி செய்தது. ➤2010 மே 6: ஆ.ராசா – நீரா ராடியா பேசிய ஆடியோ வெளியானது. ➤2010 நவ 10: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று சி.ஏ.ஜி குற்றம்சாட்டியது.
Similar News
News April 19, 2025
மீண்டும் வருகிறது ‘சங்கமித்ரா’

படு ஜோராக தொடங்கப்பட்டு, கிடப்பில் போடப்பட்ட முக்கியமான படங்களுள் சங்கமித்ராவும் ஒன்று. ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் இப்படம் பிரமாண்டமாக உருவாகும் என்று 2017ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால், அதன் பின் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை. இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்திருக்கும் சுந்தர்.சி, அடுத்த ஆண்டு இப்படத்தின் பணிகள் தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
News April 19, 2025
2026 தேர்தலில் கடும் போட்டி: மாலினி பார்த்தசாரதி

2026 சட்டப்பேரவைத் தேர்தலில் 2 திராவிட கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இடையே கடும் போட்டி நிலவும் என்று மாலினி பார்த்தசாரதி தெரிவித்துள்ளார். இபிஎஸ்சை அவர் நேரில் சந்தித்து பேசினார். பின்னர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், 2026 தேர்தலில் வெற்றி உறுதி என்று இபிஎஸ் நம்புகிறார், சட்டப்பேரவைத் தேர்தலில் காத்திருக்கும் போட்டிக்காக நன்கு தயார் நிலையில் உள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
News April 19, 2025
8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை.. மாணவன் கைது

ம.பி.யில் 8 வயது சிறுமியை பக்கத்து வீட்டில் வசிக்கும் 10ம் வகுப்பு மாணவன் பாலியல் வன்கொடுமை (ரேப்) செய்துள்ளான். வீட்டில் தனியாக சிறுமி இருந்தபோது, திடீரெனப் புகுந்து அந்த மாணவன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்போர் ஓடி வந்து, அவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போக்சோ சட்டத்தில் அவனை போலீஸ் கைது செய்தது.