News June 26, 2024

கென்யாவில் பதற்றம்: இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

image

வரிகளை உயர்த்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை கென்யா நாடாளுமன்றம் நிறைவேற்றியதை தொடர்ந்து, அங்கு வன்முறை வெடித்தது. தலைநகர் உள்பட நாடு முழுவதும் போராட்டங்களும், மோதல்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அங்கு வாழும் இந்தியர்கள், அத்தியாவசியம் இல்லாமல் வெளியில் நடமாட வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசு தரவுகளின்படி, கென்யாவில் 20 ஆயிரம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.

Similar News

News July 5, 2025

உரிமைத்தொகை விண்ணப்பம்.. அரசு புதிய அறிவிப்பு

image

ஜூலை 15-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை திட்ட விரிவாக்கத்திற்கான விண்ணப்பங்கள் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. முகாம்களுக்கு செல்லும் மக்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிதாக இணைபவர்களுக்கு செப்., முதல் ₹1,000 வரவு வைக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

News July 5, 2025

ஆண்களின் ‘அந்த 7 பழக்கங்கள்’

image

கடந்த 50 ஆண்டுகளில் ஆண்களின் உயிரணு எண்ணிக்கை சராசரியாக 62% ஆகக் குறைந்துள்ளதாக ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. இதற்கு 90% காரணம், ஆண்களின் 7 பழக்கவழக்கங்கள் தானாம். அவை: 1)புகைப்பழக்கம் 2)அதிகமாக மது அருந்துவது 3)அதிக வெப்பத்தில் இருப்பது 4)நீண்டநேரம் உட்கார்ந்து இருப்பது 5)அளவுக்கதிகமான உடலுறவு (அ) உடலுறவை முற்றிலும் தவிர்ப்பது 6)ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் 7)மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை.

News July 5, 2025

பூரிக் கட்டையால் அடித்தே கணவனை கொன்ற மனைவி

image

கணவனை பூரிக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்தது பெங்களூருவை அதிரவைத்துள்ளது. கணவன் பாஸ்கர் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால் மனைவி ஷ்ருதி ஆத்திரமடைந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற ஷ்ருதி, கணவனை பூரிக் கட்டையால் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!