News June 26, 2024
கென்யாவில் பதற்றம்: இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்

வரிகளை உயர்த்தும் சர்ச்சைக்குரிய மசோதாவை கென்யா நாடாளுமன்றம் நிறைவேற்றியதை தொடர்ந்து, அங்கு வன்முறை வெடித்தது. தலைநகர் உள்பட நாடு முழுவதும் போராட்டங்களும், மோதல்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அங்கு வாழும் இந்தியர்கள், அத்தியாவசியம் இல்லாமல் வெளியில் நடமாட வேண்டாம் என்று இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. அரசு தரவுகளின்படி, கென்யாவில் 20 ஆயிரம் இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
Similar News
News December 12, 2025
ரஜினியை வாழ்த்திய நட்சத்திரங்கள்.. (PHOTOS)

1950-ல் பிறந்து, 50 ஆண்டுகளாக திரையுலகில் கோலோச்சி கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு அரசியல் பிரபலங்கள், திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதோடு ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு, அவருடன் பணியாற்றிய அனுபவங்கள் பற்றி நினைவு கூர்ந்துள்ளனர். திரைநட்சத்திரங்கள் பகிர்ந்த அரிய போட்டோஸை மேலே SWIPE செய்து பார்க்கவும்..
News December 12, 2025
வெற்றி பெற வித்தை செய்யணும்: அண்ணாமலை

2026 தேர்தலில் 3-வது அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பில்லை என்று அண்ணாமலை கூறியுள்ளார். தமிழகத்தில் பாஜக மேலும் வளர்ச்சி பெற இன்னும் பல வித்தைகளை செய்ய வேண்டும் என்றார். ஒவ்வொரு கட்சியும் தங்களின் இடத்தை தக்க வைக்கவும், முன்னேறவுமே முயற்சிப்பார்கள் என்றார். அமித்ஷா உள்ளிட்டோருடன் மூடிய அறையில் பேசியதை வெளியில் கூற முடியாது என்றும் தெரிவித்தார்.
News December 12, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீருடன் இரங்கல்

கிளிகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த <<18542461>>’பறவை மனிதர்’<<>> ஜோசப் சேகரின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த இந்த மாமனிதரின் இறுதிக்காலம் மகிழ்ச்சியாக அமையவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜோசப் சேகர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவரது இழப்புக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP


