News April 22, 2025
UPSC தேர்வில் சாதித்த தமிழர்கள்!

யுபிஎஸ்சி தேர்வில் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தனது 5-வது முயற்சியில் கனவை எட்டிப் பிடித்துள்ளதாகவும் ஐபிஎஸ் பணியைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள்!
Similar News
News December 10, 2025
ஊழியர்களுக்கு விரைவில் HAPPY NEWS

EPF கணக்கிலுள்ள தொகைக்கு வழங்கப்படும் வட்டியை உயர்த்த மத்திய அரசு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. அதன்படி, தற்போதுள்ள 8.2% வட்டி, ஜனவரி முதல் 8.7% வரை உயர்த்தப்படலாம். இது நடந்தால், EPF கணக்கில் ₹5 லட்சம் வைத்திருப்பவருக்கு சுமார் ₹42,000 வட்டியும், ₹6 லட்சம் வைத்திருந்தால் ₹50,000 வட்டியும் கிடைக்கும். உங்கள் EPF பேலன்ஸை தெரிந்துகொள்ள 7738299899 நம்பருக்கு ’EPFOHO UAN’ என SMS அனுப்புங்கள். SHARE.
News December 10, 2025
ரேஷன் பொருள் வாங்கும்போது TRY THIS..

மக்களே, ரேஷன் கார்டு இல்லாமலேயே பொருள்கள் வாங்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? Mera Ration 2.0 செயலி மூலமாக இது சாத்தியமே. இதற்கு, செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஆதார் எண்ணை உள்ளிடுங்கள். இதில் காட்டும் டிஜிட்டல் ரேஷன் கார்டை வைத்து பொருள்களை வாங்கிக்கொள்ளலாம். பேரிடர் காலங்களில் ரேஷன் கார்டை தொலைத்துவிட்டால், இதை செய்யுங்கள். இந்த முக்கிய தகவலை எல்லாருக்கும் SHARE பண்ணலாமே.
News December 10, 2025
சற்றுமுன்: அதிமுக பொதுக்குழுவில் ரத்த காயம்

சென்னை வானகரத்தில் நடக்கும் அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க சென்ற EPS-க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அனுமதி கடிதம் இல்லாதவர்களும் முண்டியடித்துக் கொண்டு உள்ளே நுழைய முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்து பலர் கீழே விழுந்த நிலையில், ஒருவர் மீது ஒருவர் ஏறி மிதித்ததால் சிலருக்கு ரத்த காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


