News April 22, 2025
UPSC தேர்வில் சாதித்த தமிழர்கள்!

யுபிஎஸ்சி தேர்வில் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தனது 5-வது முயற்சியில் கனவை எட்டிப் பிடித்துள்ளதாகவும் ஐபிஎஸ் பணியைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள்!
Similar News
News September 18, 2025
தமிழக அரசுக்கு CPM எச்சரிக்கை

தமிழக அரசு, தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் உரிய அக்கறை செலுத்தவில்லை என்றால், அதை எதிர்த்து போராடுவதை தவிர வேறுவழியில்லை என CPM பெ.சண்முகம் எச்சரித்துள்ளார். போக்குவரத்து ஊழியர்கள், தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை குறிப்பிட்ட அவர், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கொடுமையான சுரண்டல் ஒப்பந்த முறை தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதாக குற்றம்சாட்டினார்.
News September 18, 2025
டிராவிட்டை குறிவைக்கும் 3 IPL அணிகள்

கடந்த IPL சீசனில் ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்தார் ராகுல் டிராவிட் அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், வரும் சீசனுக்கு டெல்லி, கொல்கத்தா, லக்னோ அணிகள் ராகுல் டிராவிட் இடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்தான அறிவிப்பு மினி ஏலத்திற்கு முன்னர் வர வாய்ப்புள்ளது.
News September 18, 2025
தவெகவை வேரிலேயே கிள்ளி எறியணும்: வினோஜ் பி.செல்வம்

எதிர்க்கட்சியாக இருந்தபோது திமுக எப்படியெல்லாம் வளர்ச்சியை தடுத்ததோ, அப்படி இப்போது தவெக செயல்படுவதாக வினோஜ் பி.செல்வம் தெரிவித்துள்ளார். புதிதாக அரசியலுக்குள் நுழைந்துள்ள விஜய்யை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நக்சல்களின் மனநிலையில் தவெக என்ற கட்சி தொடங்கப்பட்டிருக்கிறது. அதை (தவெக) வேரிலேயே கிள்ளி எறிய வேண்டும். அதை உறுதியுடன் கட்டாயம் செய்து முடிக்க வேண்டியது நமது கடமை என கூறியுள்ளார்.