News April 22, 2025
UPSC தேர்வில் சாதித்த தமிழர்கள்!

யுபிஎஸ்சி தேர்வில் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தனது 5-வது முயற்சியில் கனவை எட்டிப் பிடித்துள்ளதாகவும் ஐபிஎஸ் பணியைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள்!
Similar News
News December 3, 2025
தி.மலையில் தீபம் ஏற்ற உரிமை இவர்களுக்கு மட்டுமே உரிமை!

ஆண்டுதோறும் திருவண்ணாமலை மலை உச்சியில் மகா தீபத்தை ஏற்றும் உரிமை ஒரு வம்சத்தினருக்கு மட்டுமே உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், மலை உச்சியில் தீபம் ஏற்ற பர்வத ராஜகுலத்தினருக்கு (மீனவர்) உள்ள உரிமையாகும். இது, பண்டைய காலத்தில் சிவன் படையினராக இருந்த செம்படவர் சமூகத்தின் வழித்தோன்றல்களாக இவர்களை கருதுவதனால் வழங்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.
News December 3, 2025
விஜய்க்கு காங்., திடீர் ஆதரவு..

பிற அரசியல் கட்சிகள், கூட்டத்தை கூட்ட பணம் உள்ளிட்டவற்றை செலவிடும் நேரத்தில், தவெகவுக்கு கூட்டத்தை குறைப்பதே சவாலாக உள்ளது என காங்., முக்கிய நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இன்று திமுகவுடன் காங்., கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ள நிலையில், விஜய்க்கு ஆதரவளிக்கும் வகையிலான இப்பதிவு, சீட் பேரத்தை அதிகரிப்பதற்காகவே என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News December 3, 2025
₹500 கோடி இல்லனா படம் ஃப்ளாப் தான்!

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைத்து பகுதிகளிலும் படம் பெரிய விலைக்கு விற்பனையாகி இருக்கும் நிலையில், ஒட்டுமொத்தமாக ₹500 கோடியை கடந்தால் மட்டும் ஹிட் ஸ்டேட்டஸை அடைய முடியும். இதில் தமிழ்நாட்டில் ₹225 கோடியையும், வெளிநாடுகளில் ₹215 கோடியையும் வசூலிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது. இவ்வளோ பெரிய வசூலை அள்ளி, வெற்றி படமாக அமையுமா ‘ஜனநாயகன்’?


