News April 22, 2025
UPSC தேர்வில் சாதித்த தமிழர்கள்!

யுபிஎஸ்சி தேர்வில் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தனது 5-வது முயற்சியில் கனவை எட்டிப் பிடித்துள்ளதாகவும் ஐபிஎஸ் பணியைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள்!
Similar News
News October 29, 2025
பணி நியமனத்தில் முறைகேடா? அமைச்சர் நேரு விளக்கம்

நகராட்சி நிர்வாக துறையில் <<18136226>>2,538 பேரிடம் பணம்<<>> வாங்கி கொண்டு பணி வழங்கியதாக கூறிய ED-ன் புகாரை அமைச்சர் KN நேரு மறுத்துள்ளார். அவரது விளக்கத்தில், *அரசுக்கு களங்கம் ஏற்படுத்த ED பொய் கூறுகிறது. *20.9.2024-ல் முறைப்படி அண்ணா பல்கலை., மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மூலம் முறையாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். *தேர்வர்கள் தரப்பில் யாரும் புகார் அளிக்கவில்லை.
News October 29, 2025
இந்தியாவின் அதிரடியை தடுத்த மழை

இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான <<18140028>>முதல் டி20 போட்டி<<>> மழையினால் மீண்டும் தடைபட்டுள்ளது. சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, 9.4 ஓவர்களில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்துள்ளது. ஏற்கெனவே மழையினால் ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
News October 29, 2025
PM SHRI திட்டத்துக்கு ‘ரெட் சிக்னல்’ போட்ட கேரளா

கல்வி நிதிக்காக, NEP அடிப்படையிலான ‘PM SHRI’ திட்டத்தில் இணைய உள்ளதாக கேரளா அறிவித்தது. இது கேள்விகளை எழுப்பிய நிலையில், ஆளும் LDF-ல் உள்ள முக்கிய கட்சியான CPI-யே கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தையும், CPI-ஐ சேர்ந்த 4 அமைச்சர்கள் புறக்கணித்தனர். இந்நிலையில், ‘PM SHRI’-ஐ செயல்படுத்துவதற்கான வேலைகளை நிறுத்த சொல்லி CM பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


