News April 22, 2025
UPSC தேர்வில் சாதித்த தமிழர்கள்!

யுபிஎஸ்சி தேர்வில் அரசின் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் படித்த சிவச்சந்திரன் மாநில அளவில் முதலிடமும், தேசிய அளவில் 23-வது இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார். தனது 5-வது முயற்சியில் கனவை எட்டிப் பிடித்துள்ளதாகவும் ஐபிஎஸ் பணியைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர். வாழ்த்துக்கள்!
Similar News
News December 7, 2025
பெரம்பலூர்: 4வைத்து நாளாக தொடர்ந்த போராட்டம்

நீதிமன்றங்களில் இ-பைலிங் முறையை நிறுத்த வேண்டியும், ஏற்கனவே நடைமுறையில் இருந்த முறையை தொடர்ந்து அனுமதிக்க வலியுறுத்தியும் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் கடந்த 3-ந்தேதி முதல் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்தனர். மேலும் 4-வது நாளாக நேற்று கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர். இதனால் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம் ஆகிய பகுதிகளில் உள்ள நீதிமன்ற பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
News December 7, 2025
வட மாவட்டங்களில் திமுகவின் மாஸ்டர் மூவ்!

விழுப்புரம், கடலூர், அரியலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பாமகவின் வாக்குகளை குறிவைத்து திமுக காய் நகர்த்தி வருகிறது. வன்னியர்களுக்கு திமுகவில் முக்கியத்துவம் இல்லை என பேசி வரும் அன்புமணியின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையில், அந்த சமூகத்தை சேர்ந்த அமைச்சர் சிவசங்கர், லட்சுமணன் உள்ளிட்டோருக்கு மா.செ., பதவி வழங்கியதன் மூலம் கணிசமாக வாக்குகள் கிடைக்கும் என தலைமை நம்புகிறதாம்.
News December 7, 2025
2027 WC-ல் Ro-Ko இடம் பெறுவார்களா? கம்பீர் பதில்

2027 WC-ல் Ro-Ko ஜோடி விளையாடுவார்களா என்பதே பெரிய கேள்வியாக உள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க BCCI முனைவதாக கூறப்படும் சூழலில், கோச் கம்பீரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 2027 WC-க்கு 2 ஆண்டுகள் இருப்பதாக கூறிய அவர், தற்போதைய அணி குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என குறிப்பிட்டார். மேலும், இளம் வீரர்கள் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்வதாகவும் கூறினார்.


