News August 18, 2025

மத்திய அரசின் உயரிய பொறுப்புகளில் தமிழர்கள்!

image

நாட்டின் 2-வது உயரிய பொறுப்பான துணை ஜனாதிபதிக்கான ரேஸில் சி.பி.ராதாகிருஷ்ணனை பாஜக களமிறக்கியுள்ளது. ஏற்கெனவே, மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சராக ஜெய்சங்கர், தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளத்துறை இணையமைச்சராக எல்.முருகன் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு(1952–1962) பிறகு தமிழகத்தை சேர்ந்த ஒருவர் துணை ஜனாதிபதியாகும் வாய்ப்பு அமைந்துள்ளது.

Similar News

News March 18, 2026

கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது: EPS

image

குற்றங்களை விழிப்புடன் கண்காணிக்க வேண்டிய உளவுத்துறை ஸ்டாலின் குடும்பத்தின் ஏவல் துறையாக இருக்கிறது என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையில் பேசிய அவர், ஆம்ஸ்ட்ராங்க் படுகொலை முதல் காங்கிரஸின் நெல்லை மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெட்டி எரித்து கொலை செய்யப்பட்டது வரை குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை எனவும், TN-ல் கடந்த ஓராண்டில் மட்டும் 1,408 கொலைகள் நடந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளார்.

News March 18, 2026

BREAKING: அதிமுகவுடன் சேர்ந்தார்

image

OPS திமுகவில் இணைந்ததால், அதிருப்தியடைந்த அவரின் தீவிர ஆதரவாளர்கள் பலர் மீண்டும் தாய் கழகமான அதிமுகவிலேயே இணைந்து வருகின்றனர். அந்த வகையில், OPS அணியை சேர்ந்த திருநெல்வேலி மாவட்ட செயலாளர் சிவலிங்கமுத்து தலைமையில் பலர் EPS முன்னிலையில் மீண்டும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். மேலும், OPS உடன் பயணித்த இன்னும் சில தலைவர்கள் அதிமுகவுக்கு வரவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

News March 18, 2026

ஸ்டாலினிடம் நேரடியாக டீலிங் செய்யும் திருமா

image

தொகுதிப்பங்கீட்டு விவகாரத்தில் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிக தொகுதிகளை கேட்டு திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ஆனால், திமுக தொகுதிப்பங்கீட்டு குழுவோ, அக்கட்சிகள் கேட்கும் தொகுதிகளை தர மறுக்கின்றன. இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை கேட்கும் திருமாவளவன், இனி திமுக குழுவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்போவதில்லை; ஸ்டாலினிடம் மட்டுமே நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!