News September 28, 2024
கிராம சபைக்கூட்டம் நடத்த தமிழக அரசு அனுமதி

காந்தி ஜெயந்தியையொட்டி, அக்.2ல் அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கான உத்தரவில், ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11 மணிக்கு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீடுதோறும் குழாய் இணைப்பு மூலம் குடிநீர் வழங்குவதை உறுதி செய்வது தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்துமாறு கூறப்பட்டுள்ளது.
Similar News
News December 4, 2025
ஆபாச புகைப்படம்.. கொந்தளித்த ரஷ்மிகா

AI பயன்படுத்தி பெண்களை ஆபாசமாக சித்தரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என ரஷ்மிகா மந்தனா வலியுறுத்தியுள்ளார். AI-ல் உருவாக்கப்பட்ட ரஷ்மிகாவின் ஆபாச போட்டோ SM-ல் காட்டுத் தீ போல் பரவியது. இதுகுறித்து X-ல் அவர், AI என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தி, ஆனால் அதை ஆபாசமான விஷயங்களை உருவாக்கவும், பெண்களை குறிவைத்து தாக்கவும் சிலர் பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.
News December 4, 2025
அப்துல் கலாம் பொன்மொழிகள்!

*துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை *வெற்றி பெற வேண்டும் என்ற பதட்டம் இல்லாமல் இருப்பது தான் வெற்றி பெற சிறந்த வழி *சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே சில திறமைகளும் வெளிப்படுகின்றன *சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை *ஒரு முறை வந்தால் அது கனவு, இரு முறை வந்தால் அது ஆசை, பல முறை வந்தால் அது இலட்சியம் *உலகம் உன்னை அறிவதற்கு முன் உன்னை உலகுக்கு அறிமுகம் செய்துகொள்
News December 4, 2025
அதிமுக கூட்டணியில் இணையும் அன்புமணி?

அதிமுக கூட்டணியில் இணைய அன்புமணி திட்டமிட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். தொடர்ச்சியாக திமுக அரசை சாடும் அன்புமணி, தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்காமல் உள்ளார். இந்நிலையில், தான் நடத்தும் சாதிவாரி கணக்கெடுப்பு போராட்டத்தில் பங்கேற்க EPS-க்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இது கூட்டணிக்கான சமிக்ஞை ஆக கருதப்படுகிறது. எனினும் ராமதாஸுடனும் ADMK பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல்கள் பரவுகின்றன.


