News February 16, 2025
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

*நூலகம் உருவாகும் போது ஆயிரக்கணக்கான சிறைச்சாலைகளுக்கு பூட்டிடப்படுகிறது.
*உங்கள் மனசே சுத்தமாக வைத்திருக்க வேண்டிய தண்ணீர்தொட்டி.
*பிறரின் பாதையில் செல்லாமல், உன் சொந்த பாதையை தேடு.
*அடிமைத்தனத்தின் அடையாளமாகிய பொறாமையை முற்றிலும் அழிக்க வேண்டும்.
*உனக்கு தேவைப்படும் சக்தியும் உதவியும் அனைத்தும் உன்னுள் உண்டு.
Similar News
News July 5, 2025
ஆண்களின் ‘அந்த 7 பழக்கங்கள்’

கடந்த 50 ஆண்டுகளில் ஆண்களின் உயிரணு எண்ணிக்கை சராசரியாக 62% ஆகக் குறைந்துள்ளதாக ஆய்வுகளில் உறுதியாகியுள்ளது. இதற்கு 90% காரணம், ஆண்களின் 7 பழக்கவழக்கங்கள் தானாம். அவை: 1)புகைப்பழக்கம் 2)அதிகமாக மது அருந்துவது 3)அதிக வெப்பத்தில் இருப்பது 4)நீண்டநேரம் உட்கார்ந்து இருப்பது 5)அளவுக்கதிகமான உடலுறவு (அ) உடலுறவை முற்றிலும் தவிர்ப்பது 6)ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் 7)மன அழுத்தம் மற்றும் தூக்கமின்மை.
News July 5, 2025
பூரிக் கட்டையால் அடித்தே கணவனை கொன்ற மனைவி

கணவனை பூரிக் கட்டையால் அடித்து மனைவி கொலை செய்தது பெங்களூருவை அதிரவைத்துள்ளது. கணவன் பாஸ்கர் மதுபோதையில் வீட்டிற்கு வந்ததால் மனைவி ஷ்ருதி ஆத்திரமடைந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கே சென்ற ஷ்ருதி, கணவனை பூரிக் கட்டையால் தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த பாஸ்கர் பரிதாபமாக உயிரிழந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
News July 5, 2025
அனல் பறக்கும் கேப்டன் இன்னிங்ஸ்.. மீண்டும் சதம்

2-வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 269 ரன்களை குவித்து கேப்டன் சுப்மன் கில் அனைவரையும் பிரமிக்க வைத்தார். விட்ட இடத்தில் தொடங்கியது போல் 2-வது இன்னிங்சிலும் சிறப்பாக விளையாடிய கில் சதம் அடித்து கலக்கினார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 3-வது சதம் இது. அதேபோல் கே.எல்.ராகுல்(55), ரிஷப் பண்ட்(65) ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை(303/4) உயர்த்தினர்.