News March 24, 2025

வெயில்.. மக்களுக்கு எச்சரிக்கை

image

இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த 4 நாள்களில் வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று IMD எச்சரித்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் இன்று இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகும் என்பதால், நண்பகல் 12 முதல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே சென்றால், குடை மற்றும் தொப்பிகளை பயன்படுத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News December 18, 2025

இந்திய சினிமாவின் First.. சூர்யா 47-ல் புது டெக்னாலஜி

image

சூர்யா 47 படத்தில் இந்திய சினிமாவிலேயே இதுவரை இல்லாத புதிய முயற்சி ஒன்று செய்யப்பட்டு வருகிறது. படத்தை ARRI Alexa 265 கேமராவில் படமாக்கி வருகிறார்கள். தற்போதைய டெக்னாலஜியில் பெரிய திரைக்கு ஏற்ற பிரீமியம் கேமரா இதுவாம். ஹாலிவுட்டில் The Revenant, Rogue One போன்ற படங்களில் இக்கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 படத்தில் நஸ்லன், நஸ்ரியா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

News December 18, 2025

EPS-க்கு அதிர்ச்சி கொடுக்க ரெடியாகும் KAS

image

ஈரோட்டில் இன்று தவெக பரப்புரை கூட்டம் மிகப்பிரமாண்டமாக நடைபெறவிருக்கிறது. இக்கூட்டத்தில் இதுவரை இல்லாத வகையில் 30 நிமிடங்களுக்கு மேல் விஜய் உரையாற்ற வாய்ப்புள்ளதாகவும், தேர்தல் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தனது தொடர்பில் இருக்கும் அதிமுக முன்னாள் அமைச்சர்களை தவெகவில் இணைத்து, EPS-க்கு அதிர்ச்சி கொடுக்க KAS திட்டமிட்டுள்ளாராம்.

News December 18, 2025

கடும் நெருக்கடியில் தமிழக ஏற்றுமதி துறை: CM கடிதம்

image

USA வரிவிதிப்பால் திருப்பூர், கோவை, ஈரோடு, கரூரில் ஏற்றுமதி துறைகளில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக PM மோடிக்கு அவர் எழுதிய கடிதத்தில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரில் உள்ள காலணி உற்பத்தி நிறுவனங்களிலும் மோசமான சூழல் நிலவுவதாக குறிப்பிட்டார். லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை உள்ளதால், இதற்கு விரைவில் தீர்வு காண அவர் கோரியுள்ளார்.

error: Content is protected !!