News May 14, 2024

ஓட்டுக்கு பணம் தராததால் மறியல்

image

ஆந்திராவில் ஓட்டுக்கு கட்சிகள் பணம் தரவில்லை என்று கூறி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. காக்கிநாடா, ராஜமகேந்திரவரம் ஆகிய பகுதிகளில் பணம் கொடுக்கவில்லை என்று கூறி மக்கள் வேட்பாளர்கள் அலுவலகங்களை முற்றுகையிட்டனர். ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் வேட்பாளர் அலுவலகத்தில் திரண்ட மக்களை போலீசார் விரட்டியடித்தனர்.

Similar News

News September 10, 2025

வீட்டில் இருந்தே ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்!

image

ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிக்க வசதி இருக்கிறது. www.tnpds.gov.in இணையதளத்தில் ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில், கேட்கப்படும் விவரங்களை நிரப்பிவிட்டு, தேவையான ஆவணங்களை அப்லோடு செய்ய வேண்டும். 30 – 45 நாள்களில் விண்ணப்பத்தின் நிலை குறித்து அரசு தகவல் தெரிவிக்கும். SHARE IT.

News September 10, 2025

Parenting: ஆண் குழந்தைகளுக்கும் இதை சொல்லிக் கொடுக்கலாமே!

image

பெண் குழந்தைகளின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு பெற்றோர்கள் GOOD TOUCH, BAD TOUCH சொல்லிக் கொடுக்கின்றனர். ஆனால், ஆண் குழந்தைகளுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வு தேவைப்படும் என பலருக்கு தெரிவதில்லை. ஆண் குழந்தைகளும் பாலியல் சீண்டல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதால் அவர்களுக்கும் GOOD TOUCH, BAD TOUCH சொல்லிக்கொடுப்பது அவசியமாகிறது. உங்கள் குழந்தைகளுக்கு இதை இன்றே கற்பியுங்கள். SHARE.

News September 10, 2025

BREAKING: செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டார்

image

RB உதயகுமாரின் தாய் குறித்து பேசியதற்கு செங்கோட்டையன் மன்னிப்பு கேட்டுள்ளார். செங்கோட்டையனின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து RB உதயகுமார் வீடியோ வெளியிட்டார். அதுகுறித்து கேட்டபோது, ‘அவரது தாய் இறந்துவிட்டார், முதலில் அதை பார்க்கச் சொல்லுங்கள்’ என செங்கோட்டையன் கூறியதாக தெரிகிறது. இந்நிலையில், தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட அவர், RB உதயகுமாரின் தாயாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறேன் என்றார்.

error: Content is protected !!