News August 20, 2025
ஏழைமக்களின் உடல் உறுப்புகள் திருட்டு கொடூரம்: மதுரை HC

ஏழை மக்களின் உடல் உறுப்புகள் திருடப்பட்டது கொடூரம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். நாமக்கல்லில் விசைத்தறி தொழிலாளர்களிடம் கிட்னி திருடப்பட்ட வழக்கை CBI விசாரிக்கக் கோரி மதுரை HC-ல் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், இந்த விவகாரத்தின் அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள், எதிர்காலத்தில் இதனை தடுப்பதற்கான விரிவான நிலை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Similar News
News January 18, 2026
தமிழகத்தில் GI டேக் அங்கீகாரம் பெற்ற பொருள்கள்

காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி என்று ஊர் பெயருடன் சேர்த்து சொல்ல காரணம், மற்ற இடங்களை விட இந்த ஊர்களில் அவை தனித்துவமான தரம் & சிறப்புடன் உருவாகின்றன. இந்த பொருள்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு (GI) அங்கீகாரத்தை வழங்குகிறது. தமிழகத்தில் 69 பொருள்கள் இந்த அங்கீகாரம் பெற்றுள்ளன. அந்த லிஸ்ட்டில் பலரும் அறியாத சிலவற்றை மேலே கொடுத்துள்ளோம். போட்டோவை இடது புறமாக Swipe செய்து அறிந்து கொள்ளவும்.
News January 18, 2026
FLASH: திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தனர்

திமுக, வேளச்சேரி மேற்கு பகுதிச் செயலாளர் அரிமா சேகர், EPS முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார். அவருடன் திமுக பிரமுகர் காரத்தே M.P.சுதர்சன், வேளச்சேரி பகுதி இலக்கிய அணிச் செயலாளர் சேகர், வேளச்சேரி பகுதி துணை அமைப்பாளர் விநாயகம் ஆகியோரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் நெருங்குவதால் மாற்றுக் கட்சியினரை இழுக்கும் பணியில் திமுக, அதிமுக போட்டி போட்டு செய்து வருகின்றன.
News January 18, 2026
‘கைதி 2’ தற்போதைய நிலைமை என்ன? கார்த்தி ரியாக்ஷன்!

கடந்த டிசம்பரில் ‘கைதி 2’ தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ‘கூலி’ பட விமர்சனங்களை தொடர்ந்து, படம் கைவிடப்பட்டதாக தகவல் பரவியது. தற்போது அல்லு அர்ஜுன் படத்தை லோகேஷ் இயக்கவுள்ளதாக அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘கைதி 2’ படம் பற்றிய கேள்விக்கு, ‘இதைப்பற்றி லோகேஷ் சொல்வார்’ என கார்த்தி பதிலளித்துள்ளார். இதனால் லோகேஷ் பதிலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் ‘கைதி’ ரசிகர்கள்.


