News October 8, 2024
நியாயமான கோரிக்கைகளுக்கு துணை நிற்க வேண்டும்

தமிழர்களுக்கு 80% வேலை சட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டுமென ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சாம்சங் ஊழியர்களின் போராட்டம் குறித்து X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பன்னாட்டு நிறுவனங்களின் முகவராக திராவிட மாடல் அரசு செயல்படுவதாக விமர்சித்துள்ளார். மேலும், தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்த எந்த அரசும் நீடித்ததில்லை எனவும், நியாயமான கோரிக்கைகளுக்கு அரசு துணை நிற்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News August 24, 2025
10% வாக்குறுதிகள் கூட நிறைவேற்றவில்லை: இபிஎஸ்

திமுக ஆட்சி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் இபிஎஸ் சாடினார். திருவெறும்பூரில் பேசிய அவர், தேர்தல் அறிக்கையில் சொன்னதில் 10% கூட திமுக நிறைவேற்றவில்லை என்றும், ஆனால் 98% வாக்குறுதிகள் நிறைவேற்றியதாக திமுக கூறுவது பொய் என்றார். மேலும், தேர்தலை கணக்கிட்டே 30 லட்சம் மகளிர்களுக்கு உரிமை தொகை வழங்குவதாக திமுக அரசு அறிவித்துள்ளதாகவும் கூறினார்.
News August 24, 2025
லேடன் தெரியுமா? பின்லேடன்: USA-க்கு நினைவூட்டல்

பாகிஸ்தானுடன், அமெரிக்கா நெருக்கம் காட்டி வரும் நிலையில், பழைய வரலாற்றை அமெரிக்கா மறந்துவிட்டதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் அனைத்தும் தேடிய பயங்கரவாதி பின்லேடன் பாகிஸ்தானில் தான் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பதை அமெரிக்காவுக்கு நினைவுப்படுத்த விரும்புவதாக கூறினார். தங்களது வசதிக்கேற்ப அரசியல் செய்வதை இரு நாடுகளுமே விரும்புவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News August 24, 2025
பயங்கரவாத அமைப்பின் பிடியில் 215 பள்ளிகள்

ஜம்மு – காஷ்மீரில் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் அறக்கட்டளைக்கு சொந்தமான 215 பள்ளிகளை அந்த யூனியன் பிரதேச அரசு கைப்பற்றியுள்ளது. இந்த பள்ளிகள் 10 மாவட்டங்களில் உள்ளதால், சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் இதனை பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு சுமார் 51,000 மாணவர்கள் பயின்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.