News August 24, 2025

பயங்கரவாத அமைப்பின் பிடியில் 215 பள்ளிகள்

image

ஜம்மு – காஷ்மீரில் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற அமைப்பை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் அந்த அமைப்பின் அறக்கட்டளைக்கு சொந்தமான 215 பள்ளிகளை அந்த யூனியன் பிரதேச அரசு கைப்பற்றியுள்ளது. இந்த பள்ளிகள் 10 மாவட்டங்களில் உள்ளதால், சம்மந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் இதனை பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இங்கு சுமார் 51,000 மாணவர்கள் பயின்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News

News January 13, 2026

செங்கோட்டையனுடன் இணையும் அடுத்த தலைவர்

image

அமித்ஷா உடனான சந்திப்புக்கு பிறகு ஓபிஎஸ், சசிகலாவுக்கு அதிமுகவில் மீண்டும் இடமில்லை என EPS திட்டவட்டமாக கூறியிருந்தார். இதனால் மீண்டும் தவெகவா, திமுகவா என கன்ஃபியூஷனில் இருந்த OPS-ஐ, செங்கோட்டையன் காண்டாக்ட் செய்ததாக தகவல் கசிந்துள்ளது. தவெகவுக்கு வந்தால் தெற்கு மண்டல பொறுப்பாளர் பதவி கிடைக்கும் என KAS டீல் பேச, OPS-ம் தை 1-ம் தேதி பதில் சொல்கிறேன் என சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.

News January 13, 2026

பள்ளிகளுக்கு விடுமுறை.. புதிய அறிவிப்பு வந்தது

image

நாளை(ஜன.14) போகிப் பண்டிகை அன்று அனைத்து விதமான பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல ஏதுவாக இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்றும், நாளையும் சென்னையிலிருந்து 5,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளன.

News January 13, 2026

அமித்ஷாவுக்கு என்ன திமிர்: வைகோ

image

தமிழகத்தில் மதவாதிகளின் கொட்டம் ஒடுக்கப்படும், இந்துத்துவா சக்திகள் அகற்றப்படும் என வைகோ பேசியுள்ளார். திமுகவை துடைத்தெறிவோம் என அமித்ஷா பேசியதை குறிப்பிட்ட அவர், என்ன திமிர் இருந்தால் 75 ஆண்டு வரலாறு கொண்ட திமுகவை பற்றி அப்படி பேசியிருப்பார் என கொந்தளித்தார். மேலும், திராவிட இயக்கம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் எனவும் திராவிட இயக்க கோட்டையை எவராலும் அழிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!