News April 15, 2025
PM மோடியின் பதிவில் எழுத்துப்பிழை!

PM மோடிக்கு தமிழ் மீது தீவிர பற்றுள்ளதாக தொடர்ந்து பாஜகவினர் அனைத்து இடங்களிலும் பேசி வருகின்றனர். ஆனால், அவரின் தமிழ் பதிவில், எழுத்துப்பிழை இருப்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து விமர்சிக்கின்றனர். விஜயகாந்த் குறித்த PM-ன் சமீபத்திய பதிவில், ‘கூர்கிறார்கள்’ (கூறுகிறார்கள்) என பதிவிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, ‘அட்மின் சார்.. PM போஸ்ட்ல கொஞ்சம் கரெக்ட்டா டைப் பண்ணுங்க’ என விமர்சித்து வருகின்றனர்.
Similar News
News July 8, 2025
கடலூர் கோர விபத்து: இபிஎஸ் இரங்கல்

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் <<16987572>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இபிஎஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்கள் அனைவரும் பூரண உடல் நலன் பெற வேண்டும் என இறைவனை வேண்டுவதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவும் அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
News July 8, 2025
நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம்

பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதில் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஆகிய தொழிற்சங்கங்கள் பங்கேற்பது மட்டுமல்லாமல், அவர்கள் அழைப்பும் விடுத்துள்ளனர். ஆனால், அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்கவில்லை. இருப்பினும் பஸ்கள், ஆட்டோக்கள் சேவையில் பாதிப்பு இருக்கும் என தொழிற்சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
News July 8, 2025
சாதி பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய ரஷ்மிகா

கொடவா சமூகத்தில் இருந்து திரைத்துறையில் நுழைந்த முதல் நடிகை தான் தான் என்று ரஷ்மிகா மந்தனா கூறியது சர்ச்சையாகியுள்ளது. ஏனென்றால், இச்சமூகத்தில் இருந்து பிரேமா, தஸ்வினி, கரும்பையா, ரீஷ்மா, ஸ்வேதா, வர்ஷா பொல்லம்மா, ஹரிசிகா பூனாச்சா, சுப்ரா அய்யப்பா ஆகியோர் திரைக்கு வந்துள்ளனர். இதனால், ரஷ்மிகாவின் கருத்துக்கு அச்சமூக அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.