News April 15, 2025
PM மோடியின் பதிவில் எழுத்துப்பிழை!

PM மோடிக்கு தமிழ் மீது தீவிர பற்றுள்ளதாக தொடர்ந்து பாஜகவினர் அனைத்து இடங்களிலும் பேசி வருகின்றனர். ஆனால், அவரின் தமிழ் பதிவில், எழுத்துப்பிழை இருப்பதை நெட்டிசன்கள் கண்டுபிடித்து விமர்சிக்கின்றனர். விஜயகாந்த் குறித்த PM-ன் சமீபத்திய பதிவில், ‘கூர்கிறார்கள்’ (கூறுகிறார்கள்) என பதிவிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, ‘அட்மின் சார்.. PM போஸ்ட்ல கொஞ்சம் கரெக்ட்டா டைப் பண்ணுங்க’ என விமர்சித்து வருகின்றனர்.
Similar News
News September 16, 2025
உ.பி., ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள்: ஆதித்யநாத்

பள்ளி ஆசிரியர்களுக்கு TET தேர்வு கட்டாயம் என சமீபத்தில் SC தீர்ப்பளித்தது. இது ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு எதிராக சீராய்வு மனுதாக்கல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில், உ.பி., அரசும் சீராய்வு மனுதாக்கல் செய்யவுள்ளது. உ.பி., ஆசிரியர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள், அவர்களுக்கு அவ்வப்போது பயிற்சியும் அளிக்கப்படுவதாக CM யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
News September 16, 2025
10th பாஸ்.. தமிழக அரசில் ₹62,000 சம்பளத்தில் வேலை!

தமிழக அரசின் ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறையில் 375 பணியிடங்கள் காலியாகவுள்ளன. 18- 34 வயதுக்குட்பட்ட 8-வது, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். நேர்காணலின் மூலம் தேர்வு செய்யப்படுவோருக்கு அதிகபட்ச சம்பளமாக ₹62,000 வழங்கப்படும். வரும் 30-ம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். முழு விவரங்களுக்கு <
News September 16, 2025
இந்தி திணிப்புக்கு எதிராக பொங்கிய விஜய்!

இந்தியை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என விஜய் தெரிவித்துள்ளார். மத்திய அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக இந்தியை மாற்றுவதே லட்சியம் என அமித்ஷா கூறியது, வன்மையாக கண்டிக்கதக்கது என்றும் வலுக்கட்டாயமாக ஒரு மொழியை திணிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் விஜய் கூறியுள்ளார். எனவே, இந்தி திவாஸ் அன்று தெரிவித்த கருத்தை அமித்ஷா திரும்ப பெற வேண்டும் என்று விஜய் வலியுறுத்தியுள்ளார்.