News August 7, 2024
சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக, அப்பாவு பேட்டியளித்திருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப். 9இல் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Similar News
News February 11, 2026
ஆபிஸில் சீக்ரெட்டை ஷேர் பண்றீங்களா?

ஆபிஸில் சக ஊழியர்களிடம் சீக்ரெட்களை பகிர்வது சரியானது அல்ல என சைக்காலஜிஸ்டுகள் எச்சரிக்கிறார்கள். குறிப்பாக, பர்சனல் லைஃப், நிதி நிலை குறித்து பேசவே கூடாதாம். இதற்கு சில காரணங்களும் சொல்கிறார்கள். சம்பளம் குறித்து பேசுவது பொறாமைக்கு வழிவகுக்கலாம். பர்சனல் விஷயங்களை பகிர்ந்தால், ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் பிரிய, நம்மை குறித்த சீக்ரெட் வெளியாகிவிடுமோ என்ற தேவையற்ற பதற்றத்தை கொடுக்கும். உஷாரா இருங்க!
News February 11, 2026
நடிகர் ராமராஜன் விவாகரத்து.. பிரபல நடிகை கண்ணீர்

ராமராஜன் – நளினி தம்பதி கடந்த 2000-ல் விவாகரத்து பெற்றனர். ராமராஜனும் சேது பட நடிகை அபிதாவும் காதலிப்பதே நளினி உடனான விவாகரத்திற்கு காரணம் என அப்போது கிசுகிசுக்கப்பட்டது. இதுகுறித்து, 25 ஆண்டுகளுக்கு பின், அபிதா மனம் திறந்துள்ளார். ராமராஜன் தன்னை திருமணம் செய்யப் போவதாக வதந்தி பரவியபோது, தினமும் அழுது கொண்டிருந்தேன் என அபிதா குறிப்பிட்டுள்ளார். மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
News February 11, 2026
மூளை நோய்களை துல்லியமாக கண்டறியும் AI

மிச்சிகன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கிய பிரைமா என்ற AI, மூளை நோய்களை மிக துல்லியமாக கண்டறிந்துள்ளது. இது மூளை MRI ஸ்கேன்களை விநாடிகளில் ஆய்வு செய்து 97.5% துல்லியமான முடிவுகளை தந்துள்ளது. சுமார் 2.2 லட்சம் ஸ்கேன்களை கொண்டு பயிற்சி பெற்ற பிரைமா, 50-க்கும் மேற்பட்ட மூளைப் பாதிப்புகளை கண்டறியும் திறன் கொண்டது. நரம்பியல் நிபுணர்கள் இல்லாத பகுதிகளில் இது பயனுள்ளதாக இருக்கும்.


