News August 7, 2024
சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக, அப்பாவு பேட்டியளித்திருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப். 9இல் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 10, 2025
தமிழகத்தில் களமிறங்கும் ராகுல், பிரியங்கா!

2026 தேர்தலையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா காந்தி TN-ல் பிரசாரத்திற்காக களமிறங்க உள்ளனர். கிராம கமிட்டி மாநில மாநாட்டில் ராகுல் பங்கேற்பார் என்றும், பிரியங்கா காந்தி தலைமையில் மகளிர் பேரணி நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றை சிறப்பாக நடத்தி முடிப்பதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டு, அதற்கு தங்கபாலு, திருநாவுக்கரசர், ஜோதிமணி உள்ளிட்ட தலைவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
News December 10, 2025
திருமணச் செலவுகள் எந்த நாடுகளில் எவ்வளவு ஆகிறது?

திருமணச் செலவுகள் பெரும்பாலும், விருந்தினர்களின் எண்ணிக்கை, திருமணம் நடைபெறும் இடம் மற்றும் இருவீட்டாரின் குறிப்பிட்ட விருப்பத்தேர்வுகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்தே இருக்கும். இந்நிலையில், பல்வேறு நாடுகளில் சராசரியாக திருமணச் செலவுகள் எவ்வளவு ஆகின்றன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 10, 2025
தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார்

2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நெல்லை தெற்கு மாவட்ட தவெக வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன், கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவருடன் 50-க்கும் மேற்பட்ட தவெக தொண்டர்கள் திமுகவில் இணைந்தனர்.


