News August 7, 2024

சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

image

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக, அப்பாவு பேட்டியளித்திருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப். 9இல் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 15, 2025

இன்சூரன்ஸால் இந்தியாவில் விளையாடாத மெஸ்ஸி!

image

இந்தியா வந்துள்ள மெஸ்ஸி, எந்த கால்பந்து போட்டியிலும் விளையாடாததற்கு ஒரு இன்சூரன்ஸ் பாலிசிதான் காரணம். மெஸ்ஸி தனது இடது காலை சுமார் ₹8,000 கோடிக்கு இன்சூர் செய்துள்ளார். அர்ஜெண்டினா அல்லது இன்டர் மியாமி அணிகளுக்காக விளையாடும் போது காயமடைந்தால் மட்டுமே அந்த பாலிசி கவராகும். ஆனால், Exhibitional போட்டிகளில் காயம் அடைந்தால், பாலிசி கவராகாது என்பதால், மெஸ்ஸி இந்தியாவில் விளையாடவில்லை என கூறப்படுகிறது.

News December 15, 2025

இந்தியாவுக்கு பஹல்காம்.. ஆஸி.,க்கு போண்டி

image

சந்தோஷத்தை தந்த சுற்றுலா தலங்களான இந்தியாவின் <<16186680>>பஹல்காமும்<<>>, ஆஸி.,-யின் சிட்னி <<18568504>>போண்டி கடற்கரையும்<<>> பயங்கரவாதத்தின் கொடூரத்தால் துயரத்தின் தடங்களாக மாறியுள்ளன. இரு இடங்களிலும் மதம் மற்றும் இனத்தை அடிப்படையாக கொண்டே தீவிரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. பஹல்காமில் 26 உயிர்களும், சிட்னியில் 15 உயிர்களும் பறிபோன நிலையில், இரண்டிலும் பயங்கரவாத அச்சுறுத்தலில் பாதிக்கப்பட்டவர்கள் அமைதியான பொதுமக்களே. So sad!

News December 15, 2025

திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

image

கிருஷ்ணகிரி EX நகர்மன்றத் தலைவர் பரிதா நவாப், திமுகவில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், திமுகவினரே அவரை தோற்கடித்ததால், கடும் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில், திமுகவில் இருந்து விலகிய பரிதா நவாபும் அவரது ஆதரவாளர்களும், EPS முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கருணாநிதி காலத்தில் இருந்து திமுகவில் இருக்கும் பரிதா விலகியது ஸ்டாலினுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

error: Content is protected !!