News August 7, 2024

சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

image

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக, அப்பாவு பேட்டியளித்திருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப். 9இல் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

Similar News

News December 25, 2025

வசீகரமான மார்கழி கோலங்கள்!

image

மார்கழி அதிகாலையில் வீட்டுவாசலில் கோலமிடுவதால், தேவர்கள் மற்றும் ரிஷிகளிடமிருந்து நமக்கு நல்ல ஆற்றலும், ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அத்துடன் தீய சக்திகள் வீட்டினுள் நுழைவது தடுக்கப்படும் என்று முன்னோர்கள் கூறுகின்றனர். அந்த வகையில், வாசலை அலங்கரிக்கும் சில ஸ்பெஷலான மார்கழி கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை Swipe செய்து பார்த்து, வீட்டு வாசலில் முயற்சிக்கவும்.

News December 25, 2025

விஜய் + ஓபிஎஸ் + டிடிவி கூட்டணி.. முடிவு இறுதியானது

image

NDA-வில் இருந்து பிரிந்த TTV, OPS தரப்பு இதுவரை கூட்டணி முடிவை அறிவிக்கவில்லை. இதனிடையே நடைபெற்ற கூட்டத்தில், தவெகவுடன் கூட்டணி வைக்கலாமா என OPS கேட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், விரைவில் OPS நல்ல முடிவை எடுப்பார் என செங்கோட்டையன் கூறியுள்ளார். அத்துடன், அமமுகவுடன் தவெக பேச்சுவார்த்தை நடத்துகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன்மூலம் TVK + OPS + TTV கூட்டணி உறுதியாகும் என கூறுகின்றனர்.

News December 25, 2025

தமிழகத்திற்கு ஜனவரியில் புதிய டிஜிபியா?

image

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆக.31-ல் ஓய்வு பெற்றார். புதிய டிஜிபி நியமிக்கப்படாததால் எதிர்க்கட்சிகள் அரசை விமர்சித்து வந்த நிலையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஜனவரியில் தமிழகத்திற்கு புதிய டிஜிபி நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இதில், மூத்த IPS அதிகாரி சீமா அகர்வாலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!