News August 7, 2024

சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

image

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக, அப்பாவு பேட்டியளித்திருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப். 9இல் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.

Similar News

News September 17, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல். ▶அதிகாரம்: தெரிந்துசெயல்வகை. ▶குறள் எண்: 461 ▶குறள்: அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். ▶பொருள்: எந்த அளவுக்கு நன்மை கிடைக்கும் அல்லது தீமை ஏற்படும் என்று விளைவுகளைக் கணக்குப் பார்த்த பிறகே ஒரு செயலில் இறங்க வேண்டும்.

News September 17, 2025

இலவச வர்த்தக ஒப்பந்தம்: டென்மார்க் PM உடன் பேச்சு

image

இந்தியா – ஐரோப்பிய யூனியன் உடனான இலவச வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, டென்மார்க் PM மெட்டெ ப்ரெட்ரிக்சன் உடன் PM மோடி தொலைபேசி வாயிலாக ஆலோசித்தார். ஐரோப்பிய யூனியன் கவுன்சில் தலைவராக பொறுப்பேற்க உள்ள டென்மார்க்கிற்கு PM மோடி வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், இரு தரப்பு உறவுகளை மேம்படுத்துவது மற்றும் உக்ரைன் போரை விரைவில் முடிவிற்கு கொண்டு வருவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

News September 17, 2025

யூசுஃப் பதான் அரசு நில ஆக்கிரமிப்பாளர்: கோர்ட்

image

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யூசுஃப் பதான் நில ஆக்கிரமிப்பாளர் என குஜராத் ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மேலும், பிரபலங்கள் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல என்றும் கண்டித்துள்ளது. அவரது வீட்டிற்கு அருகே இருந்த அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கடந்த 2012-ல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த நிலத்தை வாங்க விரும்புவதாக அவர் தாக்கல் செய்த மனுவை சமீபத்தில் கோர்ட் நிராகரித்தது.

error: Content is protected !!