News August 7, 2024
சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக, அப்பாவு பேட்டியளித்திருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப். 9இல் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 28, 2025
தனியா? அணியா? விஜய் சூசகம்

தேர்தல் கூட்டணி குறித்து ‘ஜனநாயகன்’ விழாவில் தனது நிலைப்பாட்டை விஜய் சூசகமாக கூறியுள்ளார். எப்போதுமே தனியாக இருந்ததில்லை என்றும், 33 ஆண்டுகளாக மக்களுடன் இருப்பதால் அதுவும் ஒரு மிகப்பெரிய அணிதானே எனவும் பேசினார். இதில் சஸ்பென்ஸ் வைத்தால் தான் கிக் இருக்கும் எனக் கூறிய விஜய், இதை கைதட்டலுக்காக பேசவில்லை மனதில் இருந்து மக்களுக்காக பேசுகிறேன் என தெரிவித்தார். கூட்டணியை தான் அணி என்று கூறுகிறாரோ?
News December 28, 2025
மார்கழி மாத கலர் கோலங்கள்!

வளைத்து, நெளித்து, சுழித்து போடப்படும் கோலங்கள் நம் வாழ்க்கை சுக, துக்க பின்னல்களால் நிறைந்தவை என்பதையும், சுழிகள் போல் துன்பம் வந்தாலும் துணிவுடன் இருக்கவேண்டும் என்ற தைரியத்தையும் உணர்த்துகின்றன. எனவே, மார்கழி மட்டுமல்ல வருடத்தின் 365 நாள்களும் கோலமிட தவறாதீர்கள். அந்த வகையில் சில ஸ்பெஷலான கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை வீட்டில் தவறாமல் முயற்சிக்கவும்.
News December 28, 2025
தலைமை செயலாளர்களுடன் PM மோடி ஆலோசனை

டெல்லியில், PM மோடி தலைமையில் மாநிலங்களின் தலைமை செயலாளர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. இதில் மத்திய-மாநில அரசுகள் இடையிலான ஒத்துழைப்பு, பல்வேறு பிரச்னைகள் மற்றும் சீர்திருத்தங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளன. தேசிய அளவிலான வளர்ச்சி திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவது தொடர்பாகவும் பேசப்பட்டுள்ளது. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான மனிதவளம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் மாநாடு நடந்தது குறிப்பிடத்தக்கது.


