News August 7, 2024
சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக, அப்பாவு பேட்டியளித்திருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப். 9இல் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Similar News
News November 17, 2025
BREAKING: ஷேக் ஹசீனா குற்றவாளி: தீர்ப்பு வெளியானது

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) தீர்ப்பளித்துள்ளது. தற்போது நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார். விரைவில் தண்டனை என்னவென்று தெரியவரும். ஹசீனா ஆட்சியில், கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்க அவர் கடும் வன்முறையை கையாண்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஹசீனா மற்றும் 2 உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.
News November 17, 2025
எதிர்காலத்தை கணித்தவர் காலமானார்

அமெரிக்காவின் பிரபலமான The Simpsons கார்ட்டூனை பலர் பார்த்திருப்பீர்கள். எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னதாகவே கணித்து அதனை கார்ட்டூனாக காட்சிபடுத்துவதில்தான் இந்த தொடர் பேமஸ். இந்நிலையில் இந்த கார்ட்டூனை எழுதிய டான் மெக்ராத் (61) பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். 1997-ல் ‘The Simpsons’ தொடரின் ‘Homer’s Phobia’ எபிசோடுக்காக இவருக்கு Emmy விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
News November 17, 2025
நவ.20 பிஹாருக்கு மிக முக்கிய நாள்!

பிஹார் CM பதவியேற்பு விழா நவ.20-ம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் PM மோடி மற்றும் NDA கூட்டணியில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிஹார் CM-மாக மீண்டும் நிதிஷ்குமார்தான் பதவியேற்பார் என கூறப்படும் நிலையில், அது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. கூட்டம் முடிந்த உடன் யார் CM என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


