News August 7, 2024
சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அவதூறு வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவின் 40 எம்எல்ஏக்கள் திமுகவுக்கு வர தயாராக இருந்ததாக, அப்பாவு பேட்டியளித்திருந்தார். இவரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக நிர்வாகி பாபு முருகவேல் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், செப். 9இல் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
Similar News
News October 23, 2025
பிறந்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமை… கையை பாருங்க

உ.பி.,யின் நொய்டாவில் உள்ள தனியார் ஹாஸ்பிடலில் பச்சிளம் குழந்தைக்கு கொடுத்த தவறான சிகிச்சையால், கையை துண்டிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தவறான ஊசி தான் காரணம் என்றும், இதுபற்றி ஹாஸ்பிடலில் கூறியும் கண்டுகொள்ளவில்லை எனவும் பெற்றோர் தரப்பில் கூறப்படுகிறது. இதை விசாரிக்க 3 பேர் கொண்ட டாக்டர்கள் குழுவை அம்மாநில அரசு அமைத்துள்ளது. இம்மாதிரியான மருத்துவ தவறுகளை எப்படி தடுப்பது?
News October 23, 2025
FLASH: முடிவை மாற்றினார் விஜய்

கரூர் சம்பவத்துக்கு, விஜய் தாமதமாக வந்தது, போக்குவரத்து நெரிசல் ஆகியவை காரணமாக சொல்லப்பட்டது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தவிர்க்க ஜெ., பாணியில் தன்னுடைய பிரசாரத்தை மீண்டும் தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, ஹெலிகாப்டரில் பிரசாரம் செய்ய முடிவெடுத்திருக்கிறாராம். இதற்காக ஒரு நிறுவனத்திடம் 4 ஹெலிகாப்டர்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக பனையூர் வட்டாரத்தினர் கூறுகின்றனர்.
News October 23, 2025
பைசனில் என்னையே பார்க்கிறேன்: அண்ணாமலை

தீபாவளிக்கு வெளியான ‘பைசன்’ படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை பார்த்த அண்ணாமலை, பல காட்சிகளில் தன்னையே பொருத்திப் பார்த்துக்கொள்ள முடிந்தது என தெரிவித்துள்ளார். மேலும், தடைகள் அனைத்தையும் கடந்து சாதித்து காட்டிய மணத்தி கணேசன் கதையை மாரி செல்வராஜ் சிறப்பாக காட்டியிருக்கிறார் எனவும், சமூகத்தில் ஒற்றுமை வேண்டும் எனவும் பதிவிட்டிருக்கிறார்.