News March 23, 2024

இதுவரை ரூ.11.95 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

image

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து நேற்று வரை நடத்தப்பட்ட பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு சோதனைகளில் ரூ.11.95 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.10.28 கோடி ரொக்கம், ரூ.0.68 கோடி மது பாட்டில்கள், ரூ.0.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், 0.22 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், ரூ.0.41 கோடி இலவச பரிசுப்பொருட்கள் அடங்கும்.

Similar News

News December 26, 2025

பொங்கல் பரிசு: ரேஷன் கார்டுகளுக்கு புதிய அப்டேட்

image

புதிய ரேஷன் கார்டு எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு அரசிடமிருந்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பை அரசு ஓரிரு நாளில் அறிவிக்கவுள்ள நிலையில், தங்களுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் புதிய கார்டுக்கு விண்ணப்பித்துள்ள 2 லட்சம் பேருக்கு எழுந்தது. இந்நிலையில், பொங்கல் தொகுப்பு விநியோகம் தொடங்கும் நாளில் உங்கள் கையில் புது கார்டு இருந்தால் உங்களுக்கும் பொங்கல் பரிசு கிடைக்குமாம்.

News December 26, 2025

சீக்ரெட் செல்போனால் மனைவி கொலை!

image

தனக்கு தெரியாமல் ரகசியமாக மொபைல் மனைவியை கொலை செய்து, உடலை வீட்டின் பின்புறம் கணவரே புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ.பி மாநிலம் கோரக்பூரை சேர்ந்த அர்ஜுன், முதலில் தனது மனைவி குஷ்பூ காணாமல் போனதாக நாடகமாடினார். பின் போலீசார் விசாரணையில் திருமணமாகி 2 ஆண்டுகளாக குழந்தை இல்லாத நிலையில், மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்து கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

News December 26, 2025

21 ஆண்டுகளை கடந்தும் ஓயாத சுனாமியின் துயரம் (PHOTOS)

image

ஆழிப்பேரலையின் தாண்டவத்தால் TN-ல் சுமார் 8,000 பேர் உயிரிழந்த துயரம் நிகழ்ந்து இன்றுடன் 21 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி தாய், தந்தை, பிள்ளைகள் என உறவுகளை இழந்தவர்கள் ஆறாத வடுவுடன் கண்ணீர் மல்க கடலில் பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினர். எனது உறவுகளை திருப்பிக்கொடு என கடல் அன்னையிடம் ஒரு சிலர் மன்றாடியது காண்போரின் நெஞ்சங்களை உலுக்கியது. கடல் அலைகள் எழுப்பும் ஒலி அவர்களின் காதில் சோக கீதமாகவே ஒலிக்கிறது.

error: Content is protected !!