News March 23, 2024
இதுவரை ரூ.11.95 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து நேற்று வரை நடத்தப்பட்ட பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு சோதனைகளில் ரூ.11.95 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ.10.28 கோடி ரொக்கம், ரூ.0.68 கோடி மது பாட்டில்கள், ரூ.0.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள், 0.22 கோடி மதிப்புள்ள தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், ரூ.0.41 கோடி இலவச பரிசுப்பொருட்கள் அடங்கும்.
Similar News
News November 18, 2025
FLASH: அதிகாலையில் களமிறங்கிய ED அதிகாரிகள்

டெல்லி, செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலை.,யில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக இந்த பல்கலை.,யில் பணியாற்றிய டாக்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் NIA அதிகாரிகள் ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் நிலையில், ED-யும் களமிறங்கியுள்ளது.
News November 18, 2025
FLASH: அதிகாலையில் களமிறங்கிய ED அதிகாரிகள்

டெல்லி, செங்கோட்டை கார் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹரியானாவில் உள்ள அல் பலாஹ் பல்கலை.,யில் ED அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக இந்த பல்கலை.,யில் பணியாற்றிய டாக்டர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் NIA அதிகாரிகள் ஒருபுறம் விசாரணை நடத்தி வரும் நிலையில், ED-யும் களமிறங்கியுள்ளது.
News November 18, 2025
அதிமுகவிடம் 50+ தொகுதிகளை கேட்கிறதா பாஜக?

கூட்டணியில் இன்னும் எத்தனை கட்சிகள் வரப்போகின்றன என்பதை பொறுத்துதான் பாஜகவுக்கு எத்தனை இடம் என்பது முடிவு செய்யப்படும் என நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார். 50+ தொகுதிகளை பாஜக எதிர்பார்க்கிறது என சொல்வது தவறு என்ற அவர், தேர்தல் காலம் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும் என விளக்கமளித்துள்ளார். அத்துடன், தொகுதி பங்கீட்டை அதிமுக, பாஜக தலைமைதான் முடிவு செய்யும் என அவர் கூறியுள்ளார்.


