News March 22, 2024
தமிழகத்தில் இதுவரை 208 வழக்குகள் பதிவு

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 208 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சென்னையில் உரிமம் பெறப்பட்ட 21,229 துப்பாக்கிகளில் இதுவரை 15,113 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 962 நபர்களுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
Similar News
News April 30, 2025
2 அறை கொடுப்பேன்: VJD காட்டம்

டைம் மிஷின் கிடைத்தால் வரலாற்றில் யாரை சந்திப்பீர்கள் என விஜய் தேவரகொண்டாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ்காரர்களுக்கு 2 அறை கொடுப்பேன் எனவும், ‘சவா’ படம் பார்த்த பிறகு அவுரங்கசீப்பிற்கு 2 அறை கொடுக்க வேண்டும் என தோன்றுவதாகவும் தெரிவித்தார். மேலும், தன்னிடம் இதுபோன்று அறை வாங்குவதற்கான ஆட்களின் பட்டியல் நிறைய இருப்பதாகவும் கூறினார்.
News April 30, 2025
ஏப்ரல் 30: வரலாற்றில் இன்று

*1945 – இரண்டாம் உலகப் போர்: ஹிட்லர், தனது மனைவி இவாவுடன் தற்கொலை செய்து கொண்டார். சோவியத் படைகள் ஜெர்மனி நாடாளுமன்றத்தில் செங்கொடியை ஏற்றினர். *1955 – இந்திய இம்பீரியல் வங்கியின் பெயர் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றம் செய்யப்பட்டது. *1982 – திருச்சியில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. *2012 – இந்தியாவில் பிரம்மபுத்ரா ஆற்றில் பயணிகள் படகொன்று கவிழ்ந்ததில் 103 பேர் உயிரிழந்தனர்.
News April 30, 2025
இவரால கூட இலவச கல்வி கொடுக்க முடியல!

மெட்டா CEO மார்க் மற்றும் அவரது மனைவி பிரிசில்லா ஆகியோரின் தொடக்கப்பள்ளி அடுத்த ஆண்டு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்க, கலிஃபோர்னியாவில் கடந்த 2016-ல் இப்பள்ளி தொடங்கப்பட்டது. இது மிகவும் கடினமான முடிவு எனவும், குழந்தைகளை மற்ற பள்ளிக்கு மாற்ற உதவி செய்வோம் எனவும் தம்பதி தெரிவித்துள்ளனர். இருப்பினும் மூடப்படுவதற்கான காரணத்தை அவர்கள் அறிவிக்கவில்லை.