News March 22, 2024
தமிழகத்தில் இதுவரை 208 வழக்குகள் பதிவு

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 208 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘சென்னையில் உரிமம் பெறப்பட்ட 21,229 துப்பாக்கிகளில் இதுவரை 15,113 துப்பாக்கிகள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும் 962 நபர்களுக்கு ஜாமினில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்றார்.
Similar News
News November 15, 2025
வி.சேகர் மறைவு வேதனை அளிக்கிறது: அன்புமணி

திரைப்பட இயக்குநர் வி.சேகர் மறைவு வேதனை அளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி இரங்கல் தெரிவித்துள்ளார். திரைப்படங்கள் பொழுதுபோக்குக்கான கருவிகள் என்பதையும் கடந்து, தமது திரைப்படங்கள் வாயிலாக பொதுவுடமை, சமத்துவம், சமூகநீதி கருத்துகளைப் பரப்பியவர். முகம் சுழிக்காமல் குழந்தைகளுடன் குடும்பமாக சேர்ந்து பார்க்கும் வகையிலான திரைப்படங்களை படைத்தவர் வி.சேகர் என்றும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.
News November 15, 2025
டெல்லி சம்பவம்: டாக்டர்களின் அங்கீகாரம் ரத்து

டெல்லி கார் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 டாக்டர்களின் அங்கீகாரத்தையும் தேசிய மருத்துவ கவுன்சில் ரத்து செய்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குண்டு வெடிப்பு வழக்கில் முசாஃபர் அகமது, அதில் அகமது ராதெர், முஷாமில் ஷகீல், ஷாகீன் சயீத் உள்ளிட்ட 4 டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் NIA தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
News November 15, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.15) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.


