News October 11, 2025
சிவாஜியின் நல்லாட்சி மதத்திற்காகவும் தான்: RSS

சத்ரபதி சிவாஜியின் சுயராஜ்யம், ஒற்றுமை பற்றிய தொலைநோக்கு பார்வையை மோகன் பகவத் பாராட்டியுள்ளார். அவர் சுயநலத்துக்காக எதுவும் செய்யவில்லை எனவும், கடவுள், மதம், தேசத்துக்காகவே பாடுபட்டார் எனவும் கூறினார். நாடு முழுவதும் இந்துத்துவாவில் பெருமிதம் கொண்டவர்கள், இந்துக்களிடையே ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தவர்கள் இருந்தபோதிலும், RSS நாக்பூரில் மட்டுமே உருவாக முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News March 7, 2026
கருவறை வாயிலில் இருப்பவர்கள் யார் தெரியுமா?

கோயில் கருவறைக்கு வெளியே இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆகம விதிப்படி, கருவறையின் வாயில் காப்பவர்கள் இவர்கள். பக்தர்கள் முதலில் துவாரபாலகர்களை வணங்கிவிட்டு பின்னர், தெய்வத்தை வழிபட வேண்டும் என்பது முன்னோர்கள் கடைபிடித்த விதி. விஷ்ணு ஆலயங்களில் ஜயனும், விஜயனும், சிவாலயங்களில் சண்டனும், பிரசண்டனும் துவாரபாலகர்களாக உள்ளனர். அம்மன் கோயிலில் துவாரபாலகிகளாக ஹரபத்ரா, சுபத்ரா உள்ளனர்.
News March 7, 2026
தவெக தான் எதிர்க்கட்சி: ஜோதிமணி

2026 தேர்தலில் அதிமுக 3-வது இடத்திற்கு தள்ளப்படும் என ஜோதிமணி கூறியுள்ளார். விஜய்க்கு இளைஞர்களின் ஆதரவு அதிகமாக உள்ளது என குறிப்பிட்ட அவர், தேர்தலில் எதிர்க்கட்சியாக தவெக வருவதற்கு நிச்சயமாக வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்தார். மேலும், TN-ல் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்றும், அதிமுக சந்திக்கப்போகும் கடைசி தேர்தல் இதுதான் எனவும் பேசியுள்ளார்.
News March 7, 2026
தனிச்சின்னமா, உதயசூரியனா.. கமல் வைத்த சஸ்பென்ஸ்

போட்டியிட விரும்பும் 12 தொகுதிகளின் பட்டியலை கொடுத்த மநீமவிடம், 3 தொகுதிகளை ஒதுக்க தயார் என திமுக கூறியதாக தகவல் கசிந்தது. ஆனால் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், திமுகவுடன் தொகுதிப் பங்கீட்டுக்கு தயாராக உள்ளதாகவும், தனிச் சின்னமா அல்லது உதயசூரியனா என்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.


