News October 11, 2025
சிவாஜியின் நல்லாட்சி மதத்திற்காகவும் தான்: RSS

சத்ரபதி சிவாஜியின் சுயராஜ்யம், ஒற்றுமை பற்றிய தொலைநோக்கு பார்வையை மோகன் பகவத் பாராட்டியுள்ளார். அவர் சுயநலத்துக்காக எதுவும் செய்யவில்லை எனவும், கடவுள், மதம், தேசத்துக்காகவே பாடுபட்டார் எனவும் கூறினார். நாடு முழுவதும் இந்துத்துவாவில் பெருமிதம் கொண்டவர்கள், இந்துக்களிடையே ஒற்றுமைக்கு அழைப்பு விடுத்தவர்கள் இருந்தபோதிலும், RSS நாக்பூரில் மட்டுமே உருவாக முடியும் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.
Similar News
News December 16, 2025
ஜனாதிபதி முர்மு நாளை தமிழகம் வருகை

வேலூரில் உள்ள பிரசித்திபெற்ற தங்க கோயிலில் தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரெளபதி முர்மு நாளை தமிழகம் வருகிறார். ரேணிகுண்டாவில் இருந்து ஹெலிகாப்டரில் வேலூருக்கு வரும் முர்முவை, கவர்னர் ஆர்.என்.ரவி, மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்கின்றனர். இதையொட்டி வேலூரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிறகு அவர் ஐதராபாத் புறப்பட்டு செல்கிறார்.
News December 16, 2025
இன்று தளபதி ரசிகர்களுக்கு ட்ரீட்!

தளபதி கச்சேரி பாடலுக்கு பிறகு ‘ஜனநாயகன்’ அப்டேட் இன்றி விஜய் ரசிகர்கள் ஏமாற்றத்தில் இருந்தனர். இந்நிலையில், அடுத்த அப்டேட் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. 2-வது பாடல் ரிலீஸ் ஆக இருக்கலாம் என கூறப்படுகிறது. 10 நாள்களில் இசை வெளியீடு விழா, டிரெய்லர் ரிலீஸ், படக்குழுவினரின் நேர்காணல் என அடுத்தடுத்து அப்டேட் வரவுள்ளதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் மூழ்கியுள்ளனர்.
News December 16, 2025
திமுகவில் இளைஞரணிக்கு 40 சீட்டு?

2026 தேர்தலில் 40 சீட்டை இளைஞரணிக்கு ஒதுக்க உதயநிதி விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. நேற்று முன்தினம் தி.மலையில் நடைபெற்ற வடக்கு மண்டல மாநாட்டிற்கு பிறகு இந்த முடிவுக்கு அவர் வந்துள்ளாராம். குறைந்தபட்சம் வருவாய் மாவட்டத்திற்கு ஒரு தொகுதியில்(38) நிச்சயம் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். சுமார் 5 லட்சம் நிர்வாகிகளுடன் திமுக இளைஞரணி இருப்பது அக்கட்சிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.


