News March 19, 2024

SBI PO முடிவுகள் வெளியானது

image

எஸ்பிஐ வங்கியில் ப்ரோபேஷனரி ஆபீஸர்களை தேர்வு செய்வதற்கான இறுதி முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மொத்தம் 2000 காலிப் பணியிடங்களுக்கான தேர்வுகள் பல கட்டங்களாக நடைபெற்றன. இறுதியாக, ஜனவரி 21ஆம் தேதிக்கு பிறகு நேர்காணல் மற்றும் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றன. அதில் தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை <>இந்த லிங்க்-ஐ<<>> க்ளிக் செய்து அறியலாம்.

Similar News

News September 16, 2025

MGR படத்தை பயன்படுத்த ADMK-க்கு மட்டுமே உரிமை: KTR

image

MGR போட்டோவை பயன்படுத்த அருகதை உள்ள ஒரே கட்சி அதிமுக மட்டுமே இருக்கிறது; புதிதாக வரும் கட்சிகள் MGR போட்டோவை பயன்படுத்தி, அவரது புகழை திருட பார்ப்பதாக விஜய் மீது ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார். விஜய்க்கு கூடும் கூட்டம் கட்டுக்கோப்பான கூட்டம் அல்ல, காட்டாறு போல ஓடும் கூட்டம். அவருக்கு வரும் கூட்டம் ஓட்டாக மாற வாய்ப்பில்லை. அவர் 3-வது அணி அமைத்தாலும் வெற்றி கிடைக்காது எனவும் தெரிவித்தார்.

News September 16, 2025

நகைக்கடன்.. வங்கிக்கு படையெடுக்கும் தமிழக மக்கள்

image

2021 தேர்தலை போலவே, 2026 தேர்தலையொட்டி நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு இடம் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. இதனால், இதுவரை நகை அடமானக் கடன் வாங்காதவர்களும் கூட 3 – 5 சவரன் வரை நகைகளை வைத்து கடன் பெற, கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இதனால், கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடனுக்கு இலக்கைவிட அதிக தொகை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News September 16, 2025

மூலிகை: ஏழைகளின் நோய் விரட்டி எருக்கு!

image

விஷம் என ஒதுக்கும் எருக்கம் செடியில் பல மருத்துவ குணங்கள் கொட்டிக் கிடப்பதாக சித்த மருத்துவத்தில் குறிப்பிடப்படுகிறது *செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதில், எருக்க இலையை அடுக்கிக் காலால் மிதித்தால், குதிகால் வலி நீங்கும் *செடியின் இலைகளை நெருப்பில் போட்டு எரித்து, அந்த புகையை சுவாசித்தால் மார்புச்சளி கட்டுப்படும் *இலையை நெருப்பில் வாட்டி, கட்டிகள் மேல் கட்டினால், அவை உடையும். SHARE IT.

error: Content is protected !!