News August 20, 2024

நெல்லையில் தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

image

நெல்லையில் பணியின் போது மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்த தூய்மைப் பணியாளர் பாலசுப்பிரமணியன் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. இந்த பணம் போதாது என்றும், மேலும் ரூ.30 லட்சம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தூய்மை பணியாளர்கள் 1000 பேர் இன்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். முடிவு எட்டவில்லை என்றால் நாளை காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.

Similar News

News March 12, 2026

நெல்லையில் வாலிபர் மர்ம மரணம்

image

மானூர் அருகே உக்கிரன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த லின்சன் மைக்கேல் தனது மனைவியோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வருகிறார். மனைவி பிரிந்து சென்றதால் விரக்தியில் இருந்த மைக்கேல் வேலைக்கு செல்லாமல் உக்கிரன்கோட்டையில் உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். இந்நிலையில் அங்குள்ள கருமேனியன் குளத்தில் அவருடைய உடல் மிதந்துள்ளது. மானூர் போலீசார் உடலை கைப்பற்றி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 12, 2026

நெல்லை – மங்களூர் ரயில் சேவை தொடக்கம்

image

நெல்லை – மங்களூர் இடையே புதன்கிழமை தோறும் நெல்லையிலிருந்து வாராந்திர ரயில் இன்று முதல் இயக்கப்படுகிறது. மதியம் 3. 45 மணிக்கு இந்த ரயில் புறப்படும். கோவில்பட்டி, சாத்தூர் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கொல்லங்கோடு, பாலக்காடு, சொரனூர், திரூர், கோழிக்கோடு வடகரை தலசேரி, காஞ்சங்காடு, காசர்கோடு வழியாக மங்களூர் செல்லும்.

News March 11, 2026

நெல்லை: உங்க பெயரில் நிலம் இருக்கா? உடனே செக் பண்ணுங்க!

image

நெல்லை மக்களே நில உரிமையாளர்கள் சிட்டா, புலப்படம் (FMB) மற்றும் அடங்கல் ஆகியவற்றை தனித்தனியாக பதிவிறக்கம் செய்வதற்குப் பதிலாக, இனி <>https://eservices.tn.gov.in <<>>என்ற இணையதளத்தில் ஒருங்கிணைந்த நில ஆவணமாகப் பெற்றுக்கொள்ளலாம்; இதற்காக மாவட்டம், வட்டம் மற்றும் புல எண் விவரங்களை உள்ளீடு செய்து, வங்கி மற்றும் அரசு தேவைகளுக்கான ஆவணங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த நல்ல தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!