News April 24, 2025
11 பேரின் உயிர்களை காத்த உப்பு சாப்பாடு

கொச்சியை சேர்ந்த ஆல்பி ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேர் ஸ்ரீநகர் சென்றிருந்தனர். பின்னர் அங்கிருந்து செவ்வாய்க்கிழமை பஹல்காம் செல்கையில், சாலையோர கடையில் பிரைட் ரைஸ் சாப்பிட்டனர். அதில் உப்பு அதிகம் இருந்ததால், புதிய உணவு தயாரிக்க 1 மணி நேரம் காத்திருந்தனர். அந்த நேரத்தில்தான் பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். கடையில் நேரம் தாமதப்படாமல் பஹல்காம் சென்றிருந்தால், அவர்களும் உயிரிழந்திருப்பர்.
Similar News
News February 16, 2026
சுஜாதா பொன்மொழிகள்

*நேரம் ஒரு நதி போன்றது. நீங்கள் ஒரே நீரை இருமுறை தொட முடியாது. *அறிவு என்பது தெரிந்தவற்றை அடுக்கி வைப்பது அல்ல, தெரியாதவற்றைத் தேடிச் செல்வது. *பெண்களின் மெளனம் பல சமயம் சம்மதம் அல்ல, அது ஒரு பெரிய போராட்டத்தின் முடிவு. *நவீன உலகம் என்பது வசதிகளின் தொகுப்பு மட்டுமல்ல, சிக்கல்களின் தொகுப்பும்தான். *வாசிப்பு என்பது மூளைக்குச் செய்யும் உடற்பயிற்சி.
News February 16, 2026
பொய் பேசுவது ராகுலின் கொள்கை: அமித்ஷா

விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதாக ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதில் அளித்துள்ளார். அதில் இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு சிறு பாதிப்பு கூட ஏற்பாடாது என அவர் கூறியுள்ளார். மேலும், ராகுல் பொய் பேசுவதை கொள்கையாக கொண்டுள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாட்டு ஒப்பந்தங்களால் விவசாயிகள் பலிகடா ஆக்கியதாகவும் சாடியுள்ளார்.
News February 16, 2026
தவெகவில் இணைந்த மேலும் ஒரு அதிமுக Ex MLA

தவெகவில் செங்கோட்டையன் இணைந்த பின் பல அதிமுக Ex MLA-க்கள் தவெகவில் இணைந்து வருவது EPS-க்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. அந்த வரிசையில் வாசுதேவநல்லூர் அதிமுக Ex MLA மனோகரன் விஜய் முன்னிலையில் நேற்று தவெகவில் இணைந்தார். அவருக்கு சால்வை அணிவித்து விஜய் கட்சியில் இணைத்துக் கொண்டார். வரும் நாள்களில் இன்னும் சில அதிமுக முன்னாள் நிர்வாகிகள் தவெக பக்கம் சாய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.


