News October 19, 2025

பெற்றோரை கவனிக்காத ஊழியர்களுக்கு சம்பளம் கட்!

image

அன்பையும், பாசத்தையும் ஊட்டி தோளில் தூக்கி வளர்த்த பெற்றோர்களை கடைசி காலத்தில் கைவிட்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முடிவுகட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. வயதான பெற்றோர்களை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10-15% பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோருக்கு வழங்கப்படும் என அம்மாநில CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். அவரது இந்த செயலை எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.

Similar News

News March 11, 2026

வாயால் பறிபோன ₹25 லட்சம் தங்க நகைகள்!

image

எங்கு, எதை பேச வேண்டும் என்பதை அறிவது அவசியம். 3 நாள்கள் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பிய பெங்களூருவை சேர்ந்த குடும்பத்தினர், நகைகள் திருடு போனதை கண்டு அதிர்ந்துள்ளனர். Cab-ல் செல்லும் போது, நகை இருந்த அலமாரி பற்றி அவர்கள் பேசிக் கொண்டே சென்றுள்ளனர். இதனை கவனித்த Cab டிரைவர் தனது கைவரிசையை காட்டியுள்ளார். பிறகு போலீசார் விசாரித்து ₹25 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை மீட்டுள்ளனர்.

News March 11, 2026

5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு… மக்களுக்கு அதிர்ச்சி

image

கடந்த தேர்தலில், 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி என்ற திமுகவின் வாக்குறுதி வரவேற்பை பெற்றது. இது திமுகவின் வெற்றிக்கும் உதவியது. இந்நிலையில், நேற்று திருச்சி திமுக மாநாட்டில், நகைக்கடன் தள்ளுபடி பற்றி மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அறிவிப்பு வெளியாகாதது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனினும், விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

News March 11, 2026

நல்ல தூக்கம் வேணுமா… பாயில் படுங்க!

image

‘பாய் போட்டு படுத்தால் நோய் விட்டு போகும்’ என்பது மூத்தோரின் நல்வாக்கு. தமிழர்களின் பண்பாட்டு அடையாளமான கோரைப் பாயில் படுப்பது ஆழ்ந்த உறக்கத்தை கொடுக்கும். கர்ப்பிணிகள் பாயில் உறங்கினால், முதுகு & இடுப்பு வலி வராது. மேலும், பாயில் சமமாகப் படுக்கும்போது உடலில் ரத்தம் சீராகப் பாய்கிறது. இத்துடன், கோரைப் பாய் சூட்டை உள்வாங்கும் தன்மை கொண்டதால் உடல் உஷ்ணம் குறைந்து உடல் குளிர்ச்சி அடையும்.

error: Content is protected !!