News March 15, 2025
குடும்பத்துடன் Chill செய்யும் ரோகித் சா்மா

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரிலாக்ஸ் செய்ய குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். குடும்பத்துடன் கடலின் அழகை ரசித்த அவர், அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடருக்காக மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ரோகித் சர்மா அடுத்த வாரம் பயிற்சியை தொடங்குவார் என கூறப்படுகிறது.
Similar News
News March 15, 2025
நாய் கீறி விட்டதா? இதை செய்ய மறக்காதீங்க

வேலூரில் ரமேஷ் (49) என்பவரை, நாய் கீறிவிட்டுள்ளது. அவரும் அதை பொருட்படுத்தாமல், தடுப்பூசி போடாமல் இருந்துள்ளார். ஆனால், 40 நாட்களுக்கு பிறகு காய்ச்சல் வரவே, ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை சுட்டிக்காட்டும் டாக்டர்கள், நாய் போன்ற விலங்குகள் கடித்தால் மட்டுமல்ல, கீறினாலும் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே, தடுப்பூசி போட மறக்க வேண்டாமென அறிவுறுத்தியுள்ளனர்.
News March 15, 2025
இருமொழிக் கொள்கையால் இக்கட்டான நிலை இல்லை: CM

சென்னை பார் அசோசியேஷனின் 160வது ஆண்டு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, கூட்டாட்சித் தத்துவத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் கூறினார். மேலும், இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் இக்கட்டான நிலை இல்லை என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
News March 15, 2025
மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்

மக்களின் நம்பிக்கை, மூட நம்பிக்கையாக மாறும்போது அவர்களது செயல்கள் தடம் மாறுகின்றன. போபாலில் 6 மாத குழந்தை ஒன்று அழுதுகொண்டே இருக்க, அதற்கு பேய் பிடித்திருப்பதாக மாந்திரீகர்கள் கூறியுள்ளனர். அது மட்டுமல்லாமல், பேய் ஓட்டுவதாக கூறி, நெருப்பின் மேல் குழந்தையை கட்டி தொங்க விட்டுள்ளனர். இதனால், குழந்தையின் கண் பார்வை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.