News March 15, 2025
குடும்பத்துடன் Chill செய்யும் ரோகித் சா்மா

சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா ரிலாக்ஸ் செய்ய குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். குடும்பத்துடன் கடலின் அழகை ரசித்த அவர், அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். ஐபிஎல் தொடருக்காக மற்ற வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், ரோகித் சர்மா அடுத்த வாரம் பயிற்சியை தொடங்குவார் என கூறப்படுகிறது.
Similar News
News March 15, 2025
மகன்களை கொன்ற கொடூரத் தந்தை… அதிர்ச்சிப் பின்னணி!

அப்பாதான் எல்லோருக்கும் முதல் ஹீரோ. ஆனால், ஆந்திராவில் 2 சிறுவர்களுக்கு அப்பாவே வில்லனாகியுள்ளார். காக்கிநாடா மாவட்டத்தைச் சேர்ந்த ONGC ஊழியரான சந்திர கிஷோர், சரியாக படிக்கவில்லை எனக்கூறி தனது 2 மகன்களை வாளி நீரில் அமுக்கி கொலை செய்துள்ளார். இதனையடுத்து, அவரும் தற்கொலை செய்துள்ளார். 3 பேரின் உடல்களை கைப்பற்றி போலீஸ் விசாரித்து வருகிறது. கொடூர தந்தையின் செயல் பற்றி உங்கள் கருத்து என்ன?
News March 15, 2025
தட்கல் டிக்கெட் தெரியும், ப்ரீமியம் தட்கல் தெரியுமா?

ரயில்களில் அவசரகால பயணத்திற்கு தட்கல் டிக்கெட் முறை அமலில் உள்ளது. இதேபோல், ரயில்வேயில் ப்ரீமியம் தட்கல் டிக்கெட் முறையும் செயல்பாட்டில் இருக்கிறது. அதாவது, தட்கல் டிக்கெட்டில் 30% தற்போது ப்ரீமியம் தட்கல் டிக்கெட்டுக்கு செல்கிறது. இந்த டிக்கெட் கட்டணம், பேஸ் கட்டணத்தை விட 30% அதிகம். அதேபோல், தேவைக்கு ஏற்ப விமான கட்டணம் உயர்வது போல இதுவும் அதிகரிக்கும். இதை ரத்து செய்ய முடியாது.
News March 15, 2025
மனைவியின் ஆபாச சேட்… கோர்ட் அதிரடி தீர்ப்பு

ஆண் நண்பருடன் மனைவி ஆபாச Chat செய்வதை ஒரு கணவனால் எப்படி சகித்துக் கொள்ள முடியும் என ம.பி ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கணவருடனான செக்ஸ் வாழ்க்கை குறித்து ஆண் நண்பரிடம் பகிர்வது, மனைவி மன ரீதியாக கொடுக்கும் கொடுமை என்றே கருத முடியும் எனவும் தெரிவித்துள்ளது. கணவர்தான் தனது மொபைலை ஹேக் செய்தது, ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாக மனைவியின் குற்றச்சாட்டையும் நிராகரித்து டைவர்ஸ் வழங்கியுள்ளது.