News August 6, 2024

தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும்: திருமா

image

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், ஒவ்வொரு சமூகமும் அவரவர் வலிமைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டைப் பெற முடியுமென விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பி.சி, எம்.பி.சி, எஸ்.சி., எஸ்.டி., பிரிவினரின் இடஒதுக்கீட்டு அளவை அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப உயர்த்த வேண்டும் எனக் கூறிய அவர், தனியார் துறையில் இட ஒதுக்கீடு அளிப்பதற்கும் தமிழக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Similar News

News August 14, 2025

மீண்டும் EPS-ஐ தாக்க தொடங்கிய OPS

image

இழிவான நடத்தை கொண்டவர் EPS என OPS சாடியுள்ளார். மேலும், தலைமை பண்பிற்கான அறிகுறி துளியும் இல்லாத EPS-யிடம் ADMK சிக்குண்டு கிடப்பதால் தொடர் தோல்விகளை சந்தித்து வருவதாகவும், செல்லூர் ராஜு, தம்பிதுரை என ADMK மீண்டும் ஒன்றிணைய நினைக்கும் மூத்தத் தலைவர்களை குறிவைத்து அவர் அவமதிப்பு செய்து வருவதாகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். நீண்ட காலம் அமைதி காத்த OPS மீண்டும் EPS-யை தாக்க தொடங்கியுள்ளார்.

News August 14, 2025

Office Laptop-ல் Whatsapp Login பண்ணாதீங்க..!

image

நாம் அன்றாடம் பயன்படுத்தும் செயலியாக மாறிவிட்டது Whatsapp. ஆனால், ஆபீஸில் தரும் லாப்டாப்களில் Whatsapp-ஐ பயன்படுத்த வேண்டாம் என இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை எச்சரித்துள்ளது. அப்படி செய்தால் உங்களது அலுவலகம் உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை எளிதில் தெரிந்துக்கொள்ள முடியுமாம். Screen Monitoring, Malware போன்ற விஷயங்களை கொண்டு உங்கள் தகவல்களை திருடமுடியும் என்கின்றனர். SHARE.

News August 14, 2025

தூய்மை பணியாளர்கள் விவகாரம்.. CMக்கு நெருக்கடி

image

தலைநகர் சென்னையில் 13 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்களை கைது செய்ததற்கு திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருகின்றன. இது ஜனநாயகத்திற்கு எதிரானது என விசிகவின் வன்னி அரசு தெரிவித்துள்ளார். தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக சிபிஎம் ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. அரசுக்கு எதிராக திமுக கூட்டணி கட்சிகளே கண்டனம் தெரிவித்து வருவது ஸ்டாலினுக்கு நெருக்கடியை கொடுத்துள்ளது.

error: Content is protected !!