News August 4, 2024

பிரதமர் மோடியிடம் அறிக்கை தாக்கல்

image

வயநாடு நிலச்சரிவு தொடர்பான ஆய்வறிக்கை, பிரதமர் மோடியிடம் வழங்கப்பட்டது. வயநாடு மாவட்டத்தில், ஜூலை 29இல் நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 350க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் தங்களது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன், அது தொடர்பான அறிக்கையில் பிரதமர் மோடியிடம் நேரில் வழங்கியுள்ளார்.

Similar News

News January 15, 2026

திமுக அரசின் மீதான கரும்புள்ளி: நயினார்

image

ஆசிரியர் விஷம் குடித்து <<18857511>>தற்கொலை <<>>செய்துகொண்டது வேதனையளிப்பதாக நயினார் இரங்கல் தெரிவித்துள்ளார். ‘உங்க கனவ சொல்லுங்க’ என விளம்பர நாடகம் போடும் CM ஸ்டாலின், நியாயமான கோரிக்கைகளுக்காக போராடிய ஆசிரியர் கண்ணன் வாழ்நாள் கனவிற்கு செவிமடுக்காமல் போனதன் விளைவுதான் இந்த துர்மரணம். இது திமுக அரசின் மீதான கரும்புள்ளி. திமுகவின் அப்பட்டமான நம்பிக்கை துரோகத்திற்கு 2026-ல் முடிவு கட்டப்படும் என்றார்.

News January 15, 2026

தமிழகம் முழுவதும் நாளை டாஸ்மாக் கடைகள் இயங்காது

image

திருவள்ளுவர் தினமான நாளை அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, டாஸ்மாக், பார்கள் திறந்தாலோ, கள்ளச்சந்தையில் விற்றாலோ சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இன்று இரவு 10 மணி முதல் ஜன.17 பிற்பகல் 12 மணி வரை மது வாங்க முடியாது. இதன் காரணமாகவும், பொங்கல் பண்டிகை என்பதாலும், இன்று டாஸ்மாக் கடைகள் திறந்த உடனே கூட்டம் அலைமோதுகிறது.

News January 15, 2026

உயிருடன் இருப்பதை உறுதி செய்ய APP அறிமுகம்

image

சீனாவில் தனிமையில் தவிப்பவர்கள் Hikikomori என்ற வருத்தத்திற்குரிய Trend-ஐ பின்பற்றுகின்றனர். இவர்கள் ஒரு அறைக்குள் தங்களை மாதக்கணக்காக பூட்டிக்கொள்கின்றனர். பிறகு உணவு தீர்ந்து பசியில் வாடி இறக்கின்றனர். பேசவும் யாருமில்லாததால் இறந்தால் கூட தாமதமாகவே தெரியவருகிறது. எனவே, இதற்காக ஒரு APP-ஐ அறிமுகப்படுத்தும் நிலைக்கு சீனா வந்துள்ளது. நம்மூரில் இந்நிலை வராமலிருக்க நண்பர்களிடம் அடிக்கடி பேசுங்க.

error: Content is protected !!