News April 24, 2025
ரஜினி கதையில் சூர்யாவுக்காக செய்த மாற்றம்

‘பேட்ட’ படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘ரெட்ரோ’ கதையை உருவாக்கியதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். முதலில் இந்த கதை முழுக்க முழுக்க ஆக்ஷன் கதையாக இருந்ததாகவும், ஆனால், சூர்யா நடிப்பதாக மாறியதால், அக்கதையில் காதலை கலந்து தற்போதைய ‘ரெட்ரோ’-ஐ உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் மே 1-ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.
Similar News
News March 8, 2026
5,000 பணியிடங்கள்.. உடனே அப்ளை பண்ணுங்க

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் இந்த <
News March 8, 2026
பெண் போராட வேண்டியிராத உலகை படைப்போம்: கமல்

பெண்களுக்கு சம வாய்ப்புகளையும், சம அதிகாரத்தையும் பகிர்ந்தளிக்கையில் ஒட்டுமொத்த சமுதாயமும் வெற்றி பெறுகிறது என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார். மகளிர் தினத்துக்கு வாழ்த்து தெரிவித்த அவர், மகளிர் தங்கள் உரிமைகளுக்காகப் போராட வேண்டியிராத சமத்துவ உலகை படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும்,
ஒவ்வொரு பெண்ணும் தனக்கான சிறகுகளைப் பெறுவதை உறுதி செய்வோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 8, 2026
விஜய்க்கு அடுத்த அதிர்ச்சி..

‘ஆட்சியில் பங்கு’ என்ற அஸ்திரத்தை விஜய் வீசியதால், பல கட்சிகள் தவெகவுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டின. ஆனால் இதுவரை, எந்த கட்சியும் கூட்டணி வைக்க முன்வரவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள விஜய், தவெகவை நெருங்கி வந்த கட்சிகளுடன் உரிய முறையில் பேசி கூட்டணியில் சேர்க்காமல் இப்படி நமக்கு இருந்த வாய்ப்புகள் அனைத்தையும் கோட்டை விட்டுவிட்டீர்களே என்று ஆதவ் மீது அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.


