News April 24, 2025

ரஜினி கதையில் சூர்யாவுக்காக செய்த மாற்றம்

image

‘பேட்ட’ படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘ரெட்ரோ’ கதையை உருவாக்கியதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். முதலில் இந்த கதை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையாக இருந்ததாகவும், ஆனால், சூர்யா நடிப்பதாக மாறியதால், அக்கதையில் காதலை கலந்து தற்போதைய ‘ரெட்ரோ’-ஐ உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் மே 1-ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

Similar News

News November 27, 2025

உங்க SIR படிவம் அப்லோட் ஆகிடுச்சான்னு செக் பண்ண..

image

★<>https://voters.eci.gov.in/<<>> பக்கத்திற்கு செல்லவும் ★‘Fill enumeration’ என்பதை கிளிக் செய்யவும் ★அதில், உங்களின் வாக்காளர் அட்டை எண்ணை கொடுக்கவும் ★பூத் லெவல் அலுவலர்களால் (BLO) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தால், உங்களின் படிவம் காட்டும். பதிவேற்றம் செய்யப்படாவிட்டால், உடனே BLO-வை தொடர்பு கொண்டு அப்லோட் செய்ய அறிவுறுத்தவும். இந்த அத்தியாவசிய பதிவை அனைவருக்கும் பகிரவும்.

News November 27, 2025

விவசாயிகளுக்கு ₹31,500 மானியம் வழங்கும் அரசு திட்டம்!

image

பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ₹31,500 வரை மானியம் என 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. அத்துடன் இயற்கை வேளாண்மை குறித்த பயிற்சியும் இலவசமாக வழங்கப்படும். இதற்கு, குறைந்தது 1 முதல் 5 ஏக்கர் நிலம் இருக்கவேண்டும். இயற்கை விவசாயத்துக்கு மாற விரும்புபவர்கள் <>pgsindia-ncof.gov.in<<>> இணையதளத்தில் விண்ணப்பித்து மானியத்தை பெறலாம். SHARE.

News November 27, 2025

அடுத்த தலைவர் தவெகவில் இணைந்தார்

image

செங்கோட்டையனை தொடர்ந்து சேலம் மாவட்டத்தை சேர்ந்த Ex MLA-வும், பாஜக நிர்வாகியுமான வெங்கடாஜலம் தவெகவில் இணைந்துள்ளார். அதிமுகவில் MLA, மா.செ.,வாக இருந்த இவர், 2023-ல் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார். தற்போது அங்கிருந்து விலகி தவெகவுக்கு தாவியுள்ளார். KAS கட்சியில் இணையும் நிகழ்ச்சியில்தான் இவரும் இணைந்தார். எனவே, இவரையும் செங்கோட்டையன் தான் தவெகவுக்கு அழைத்து சென்றாரா என கேள்வி எழுந்துள்ளது.

error: Content is protected !!