News April 24, 2025

ரஜினி கதையில் சூர்யாவுக்காக செய்த மாற்றம்

image

‘பேட்ட’ படத்திற்கு பிறகு ரஜினியை வைத்து படம் இயக்க வேண்டும் என்பதற்காகத்தான் ‘ரெட்ரோ’ கதையை உருவாக்கியதாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். முதலில் இந்த கதை முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கதையாக இருந்ததாகவும், ஆனால், சூர்யா நடிப்பதாக மாறியதால், அக்கதையில் காதலை கலந்து தற்போதைய ‘ரெட்ரோ’-ஐ உருவாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். வரும் மே 1-ம் தேதி இப்படம் ரிலீசாகிறது.

Similar News

News November 25, 2025

தள்ளிப்போன திருமணம்.. ஸ்மிருதி எடுத்த முடிவு

image

கொண்டாட்டத்துடன் நடைபெற வேண்டிய ஸ்மிருதி மந்தனாவின் திருமணம், அவரது தந்தையின் உடல்நலக் குறைவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது காதலரான பலாஷ் முச்சலும் அதீத காய்ச்சலால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கஷ்டமான சூழலில், திருமணம் சார்ந்த பதிவுகளை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து ஸ்மிருதி நீக்கியுள்ளார். எனவே, ‘கவலைப்படாதீங்க மந்தனா’ என நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

News November 25, 2025

அதிக ஜனத்தொகை கொண்ட நகரம் எது?

image

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தா உருவெடுத்துள்ளது. சுமார் 4.2 கோடி பேர் அந்நகரத்தில் வசிப்பதாக UN அறிக்கை கூறுகிறது. 3.7 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாம் இடத்தில் வங்கதேச தலைநகர் டாக்காவும், 3.34 கோடி மக்கள்தொகையுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோ மூன்றாம் இடத்திலும் உள்ளன. எனினும், ஜகார்த்தாவில் லட்சக்கணக்கான மக்கள் வீடின்றி வாழ்வதாக கூறப்படுகிறது.

News November 25, 2025

கள்ள ஓட்டுகளை நம்பியுள்ள கட்சி திமுக: ஜெயக்குமார்

image

கல்வித்தகுதியே இல்லாத சிலர் BLO-க்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். SIR பணிகளில் இதுபோன்றோர் எப்படி பணிபுரிவர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எனவே, அனைத்து BLO-க்களின் தகுதிகளை உள்ளடக்கிய பட்டியலையும் ECI-யிடம் அவர் கேட்டுள்ளார். மேலும், கள்ள ஓட்டுகள், இறந்தவர்களின் வாக்குகளை மட்டுமே திமுக நம்பி இருப்பதால், SIR-ஐ அக்கட்சி எதிர்ப்பதாகவும் விமர்சித்தார்.

error: Content is protected !!