News September 13, 2024
EPS மீது ராஜேந்திர பாலாஜி அதிருப்தி?

EPS மீது ADMK முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ADMK-வில் விருதுநகர் மாவட்டத்தை அமைப்பு ரீதியில் பிரிப்பதை அவர் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் EPS மீது அதிருப்தியில் உள்ள அவர், அண்மையில் EPS கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சிக்கு செல்லாமல் புறக்கணித்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
Similar News
News December 31, 2025
New Year வாழ்த்து செய்தியை கிளிக் செய்யாதீங்க

ஒரு புத்தாண்டு வாழ்த்து செய்தி, உங்களது வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் காலி செய்யும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாம், வாட்ஸ் ஆப்பில் புத்தாண்டு வாழ்த்துடன் APK ஃபைலை உருவாக்கி, ஒரு கும்பல் மொபைலை ஹேக் செய்து பணத்தை கொள்ளையடிக்கிறதாம். இதனால் வாட்ஸாப்பில் வரும் APK ஃபைலை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
News December 31, 2025
TN அரசுக்கு அளவுக்கு மிஞ்சிய கடனா? சிவசங்கர் விளக்கம்

TN அரசு மற்ற மாநிலங்களை விட கூடுதல் கடன் பெற்றதாக EPS உள்பட எதிர்கட்சியினர் வைத்த குற்றசாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். ஒரு மாநிலம் எவ்வளவு கடன் வாங்க முடியும் என்பதற்கு மத்திய அரசு வரையறுத்துள்ள குறியீடுக்கு கீழ்தான், TN கடன் பெற்றுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். எதிர்கட்சியினர் தமிழகத்துடன் ஒப்பிடும் பல மாநிலங்கள், அளவுக்கு மீறி கடன் வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
News December 31, 2025
மதுவை தொடமாட்டேன்: New year சபதம் எடுத்துட்டீங்களா?

புத்தாண்டு பிறந்தாலே குடிமகன்கள் பலரும் இனி சரக்கை ஒருபோதும் தொடவே மாட்டேன் என ஒவ்வொரு ஆண்டும் அதிரடி சபதம் எடுப்பார்கள். ஆனால் அப்படி திடீரென்று மதுவை நிறுத்துவது அதிக மது அருந்துபவர்களின் உடல்நலனை பாதிக்கும் என்கிறார் அமெரிக்க உடல்நல நிபுணர் ட்ரான்சோ. மேலும், மதுவை ஒரேடியாக நிறுத்துவதற்கு பதில், Sober curious மனநிலையுடன் வாரத்திற்கு 1,2 பாட்டில்களை குறைப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளார்.


