News September 13, 2024
EPS மீது ராஜேந்திர பாலாஜி அதிருப்தி?

EPS மீது ADMK முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ADMK-வில் விருதுநகர் மாவட்டத்தை அமைப்பு ரீதியில் பிரிப்பதை அவர் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் EPS மீது அதிருப்தியில் உள்ள அவர், அண்மையில் EPS கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சிக்கு செல்லாமல் புறக்கணித்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
Similar News
News December 25, 2025
வரும் நாள்களில் வெள்ளியின் விலை இதுதான்!

வெள்ளி விலை நேற்று(டிச.24) ஒரே நாளில் ₹10,000, இன்று(டிச.25) ₹1,000 என உயர்ந்து ₹2,45,000-ஐ தொட்டுள்ளது. தற்போது தொழில்துறையில் வெள்ளியின் பயன்பாடு அதிகரித்திருப்பதால் அதன் விலை எகிறி வருகிறது. அதன்படி, வரும் நாள்களில் வெள்ளி கிராமுக்கு ₹300, கிலோவுக்கு ₹3 லட்சம் வரை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணிக்கின்றனர். எனவே வெள்ளியிலும் சிறு முதலீடுகளை செய்யலாம் என அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News December 25, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை கொலை.. காதலன் கைது

‘தி லயன் கிங்’ மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த நடிகை இமானி ஸ்மித்(25) தனது வீட்டில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்ததாக கூறி காதலன் ஜோர்டான் டி. ஜாக்சன் என்பவரை சற்றுமுன் அமெரிக்க போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். நடிகை இமானிக்கு ஏற்கெனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், வழக்கின் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
News December 25, 2025
EPS-ஐ நேரடியாக சந்தித்தார் பிரேமலதா

அதிமுகவுடனான தேமுதிகவின் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகி இருப்பதாக பேசப்படும் நிலையில், EPS-ஐ நேரடியாக சந்தித்திருக்கிறார் பிரேமலதா. ஆனால் இச்சந்திப்பில் அரசியல் பேசவில்லை என கூறிய அவர், குருபூஜைக்கான அழைப்பிதழை வழங்குவதற்காகவே சென்றதாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும் ஸ்டாலின் உள்பட பாஜக, காங்., சீமான், விஜய் என அனைவருக்கும் நேரில் அழைப்பிதழை கொடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


