News September 13, 2024
EPS மீது ராஜேந்திர பாலாஜி அதிருப்தி?

EPS மீது ADMK முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ADMK-வில் விருதுநகர் மாவட்டத்தை அமைப்பு ரீதியில் பிரிப்பதை அவர் விரும்பவில்லை என சொல்லப்படுகிறது. இதனால் EPS மீது அதிருப்தியில் உள்ள அவர், அண்மையில் EPS கலந்து கொண்ட திருமண நிகழ்ச்சிக்கு செல்லாமல் புறக்கணித்து விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து உங்கள் கருத்தை கீழே பதிவிடுங்கள்.
Similar News
News January 8, 2026
தொடர் சரிவில் சந்தைகள்.. டிரம்ப் மிரட்டல் காரணமா?

பங்குச்சந்தைகளின் தொடர் சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். கடந்த 4 நாள்களாகவே மீளாத சென்செக்ஸ் இன்று(ஜன.8) வர்த்தக நேர முடிவில் 780 புள்ளிகளை இழந்து 84,180 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதேபோல், நிஃப்டி 263 புள்ளிகளை சரிந்து 25,876 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. இந்தியா மீது <<18795308>>டிரம்ப் 500% வரி விதிக்க முடிவு<<>> செய்துள்ளதால் அந்நிய முதலீட்டாளர்கள் பலர் வெளியேறி வருவதாக கூறப்படுகிறது.
News January 8, 2026
JUSTIN : தமிழ் நடிகர் அதிரடி கைது

பண மோசடி வழக்கில் நடிகர் அஜய் வாண்டையார் கைது செய்யப்பட்டுள்ளார். Ex MLA ஒருவரிடம் ₹3.5 கோடி பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் இன்று பெங்களூரு விமான நிலையத்தில் அஜய் வாண்டையாரை கைது செய்த போலீசார், சென்னை அழைத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே, இதுபோன்ற வழக்கில் சிக்கியதால், இவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
News January 8, 2026
நேரு சிறை செல்வதை இனி தடுக்க முடியாது: அருண்ராஜ்

₹1,020 கோடி ஊழல் விவகாரத்தில் அமைச்சர் நேரு சிறைக்கு செல்வதை இனி யாராலும் தடுக்க முடியாது என TVK-வின் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இத்தனை நாள்களாக இதை மூடி மறைக்கப் பார்த்தீர்கள்; ஆனால் இனி நடமாட முடியாது என்ற நிலை வந்தவுடன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளீர்கள் என்று சாடிய அவர், அமலாக்கத்துறையே நேரடியாகத் தூக்கி உள்ளே வைத்துவிடும் என்ற பயத்தினால் இந்த விசாரணை உத்தரவா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


