News April 23, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News July 8, 2025
வேன் விபத்தில் அக்கா – தம்பி உயிரிழந்த சோகம்

கடலூர், செம்மங்குப்பத்தில் <<16987835>>ரயில்<<>> மோதி பள்ளி வேன் விபத்துக்குள்ளானதில் சாருமதி (15), செழியன் (14) & விமலேஷ் (10) ஆகிய 3 மாணவர்கள் உயிரிழந்தனர். இவர்களில் சாருமதி & செழியன் ஆகிய இருவரும் அக்கா – தம்பி என்பது சோகத்தின் உச்சம். இரு குழந்தைகளையும் இழந்த அவர்களது பெற்றோர் ஹாஸ்பிடலில் கதறி அழும் காட்சிகள் நெஞ்சை உலுக்குகின்றன. மேலும், விஷ்வேஸ் மற்றும் டிரைவர் சங்கர் சிகிச்சையில் உள்ளனர்.
News July 8, 2025
கடலூர் துயரம்: அன்புமணி, டிடிவி, அண்ணாமலை இரங்கல்

கடலூரில் <<16987125>>பள்ளி வேன் மீது ரயில்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், இந்த துயர சம்பவத்திற்கு அன்புமணி, அண்ணாமலை, டிடிவி, வேல்முருகன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதனிடையே, தமிழ் தெரியாதவர்களை தமிழ்நாட்டில் கேட் கீப்பராக நியமிக்கக் கூடாது என வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
News July 8, 2025
அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள்: இபிஎஸ்

அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் வந்து சேரவிருப்பதாக இபிஎஸ் தெரிவித்துள்ளார். கோவை ரேஸ் கோர்ஸ் சாலையில் வாக்கிங் சென்று மக்களிடம் பரப்புரை செய்த இபிஸ், அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி ஒன்று, தேர்தல் கூட்டணி தொடர்பாக கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த அவர், கூட்டணியில் பல ரகசியங்கள் இருப்பதாகவும், சூழலுக்கு தகுந்தார்போல் பல கட்சிகள் வந்து சேரும் என்றார்.