News April 23, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News February 26, 2026
தேசிய தலைவரானார் அஜித் பவார் மனைவி!

NCP கட்சியின் தேசிய தலைவராக அஜித்பவாரின் மனைவி சுனேத்ரா பவார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அஜித்பவாரின் மரணத்தில் எழுந்துள்ள சந்தேகங்களுக்கு நடுவே NCP கட்சியில் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிரா DCM ஆன சுனேத்ரா பவார், பின்னர் NCP கட்சி தலைவராக போட்டியின்றி தேர்வானார். சரத்பவார் பிரிவுடன் NCP-யை இணைக்கும் முயற்சிகள் தடைபட்ட சூழலில் தற்போது தேசிய தலைவராகவும் சுனேத்ரா தேர்வாகியுள்ளார்.
News February 26, 2026
திங்கள்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை

அய்யா வைகுண்டரின் அவதார தினத்தையொட்டி, <<19236842>>குமரி, தென்காசி, நெல்லையை<<>> தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கும் மார்ச் 4-ல் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது. மேலும், மாசி மக திருவிழாவையொட்டி மார்ச் 2-ல் (திங்கள்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் உள்ளூர் விடுமுறையாகும். இதனை ஈடுசெய்ய மார்ச் 14 வேலைநாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
News February 26, 2026
மகளை பெற்ற தந்தைகளுக்கு மகிழ்ச்சியான செய்தி

மகள்களை பெறாத தந்தையரை விட, மகள்களை பெற்ற தந்தையர் 2 ஆண்டுகள் கூடுதலாக வாழ்வதாகவும், அவர்களின் மனநலமும், சுயமதிப்பும் சிறப்பாக உள்ளதாகவும் போலந்து ஆய்வில் தெரிய வந்துள்ளது. மகன்கள் இருந்தாலும், இல்லையென்றாலும் மகள்கள் இருந்தால் சராசரியாக 74 வாரங்கள் தந்தையரின் ஆயுள் கூடுகிறதாம். அதேபோல குழந்தைகள் இல்லாத பெற்றோரை விட, குழந்தைகள் உள்ள பெற்றோர் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ்கிறார்களாம்.


