News April 23, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News February 28, 2026
வரலாற்றில் இன்று

*1986 – சுவீடன் பிரதமர் ஓலாஃப் பால்மே சுட்டுக் கொல்லப்பட்டார். *2002 – குஜராத் வன்முறையில் குறைந்தது 55 பேர் கொல்லப்பட்டனர். *2006 – சத்தீஷ்காரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர். *1921 – தமிழ் எழுத்தாளர் தி.ஜானகிராமன் பிறந்த தினம். *2003 – தமிழ் நடிகர் மேஜர் சுந்தரராஜன் மறைந்த நாள். *ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28 அன்று இந்தியாவில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்படுகிறது.
News February 28, 2026
வாயு தொல்லையா? இந்த பழங்களை தவிர்க்கவும்

நெஞ்செரிச்சல் மற்றும் வாயுத் தொல்லை உள்ளவர்கள் சில பழங்களை அடிக்கடி சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. ஆரஞ்சு, எலுமிச்சை, அன்னாசி, மாங்காய், புளிப்பு திராட்சை ஆகியவை அமிலத்தன்மை அதிகம் கொண்டதால், வயிறு பிரச்னை உள்ளவர்கள் அளவாக உட்கொள்ள வேண்டும் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த பழங்களில் உள்ள அமிலத்தன்மை வாயு & நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். தொடர்ந்து வாயு தொல்லை உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.
News February 28, 2026
முந்திரி தொண்டையில் சிக்கி குழந்தை மரணம்

முந்திரி தொண்டையில் சிக்கி 2 வயது பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முந்திரியை சாப்பிட்டபோது ஒரு முந்திரி தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் குழந்தை உயிரிழந்தது. குழந்தைகளுக்கு முழு பிஸ்கட், முழு நட்ஸ் கொடுப்பதை தவிர்க்கவும்.


