News April 23, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News January 22, 2026
டிஜிட்டல் கைது என மிரட்டி ₹16 லட்சம் கொள்ளை

மும்பையைச் சேர்ந்த 75 வயது முதியவருக்கு கடந்த மாதம் 11-ம் தேதி செல்போனில் அழைப்பு வந்துள்ளது. அதில், பேசிய மோசடி கும்பல், டெல்லி குண்டுவெடிப்பு நடத்தியவர்களுடன் அவருக்கு தொடர் இருப்பதாகவும், அவர்களிடம் இருந்து முதியவர் வங்கி கணக்கிற்கு ₹7 கோடி பரிமாற்றம் நடந்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். பின்னர், அவரை டிஜிட்டல் கைது செய்துள்ளதாக மிரட்டி, அவரிடமிருந்து ₹16 லட்சம் பறித்துள்ளனர்.
News January 22, 2026
ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு விரைவில் புதிய அம்சம்!

பிரபல கிளவுட் சேவையான Google Photos-ஐ பயன்படுத்தும்போது, பின்னணியில் நிகழும் sync காரணமாக போனில் சார்ஜ் வேகமாக குறைகிறது. இதனை சரிசெய்ய விரைவில் கூகுள் புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இதனால் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுள் மற்றும் செயல்திறன் அதிகரிக்கும். போனின் பேட்டரி நிலைக்கு ஏற்ப புத்திசாலித்தனமாக இயங்கும்.
News January 22, 2026
சாய் பாபா பொன்மொழிகள்

*பத்துப் புத்தகங்களைப் படித்ததால் மட்டுமே நீங்கள் படித்தவர்கள் இல்லை. *பிரார்த்தனை செய்யும் உதடுகளை விட சேவை செய்யும் கைகள் புனிதமானவை. *ஒருவரையொருவர் நேசியுங்கள், அன்பைப் பொழிவதன் மூலம் மற்றவர்கள் உயர்ந்த நிலைக்கு உயர உதவுங்கள். *நல்ல நடத்தையே கல்வியறிவு பெற்றவரின் அடையாளம். *தந்தை, தாய் மற்றும் ஆசிரியர் மூவரும் ஒரு நாட்டின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முதன்மையானவர்கள்.


