News April 23, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News February 4, 2026
இந்த வார ஓடிடி ட்ரீட்!

இந்த வாரம் ரசிகர்களுக்கு விருந்தளிக்க பல படங்கள், வெப்சீரிஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகி வருகின்றன *பிரபாஸின் ‘ராஜாசாப்’ : பிப்.6, ஜியோ ஹாட்ஸ்டார் *சரத்குமாரின் ‘கொம்புசீவி’ : பிப்.6, டெண்ட்கொட்டா *மகேந்திரனின் ‘ நீலகண்டா’: பிப்.6, சன் நெக்ஸ்ட் *’பராசக்தி’: பிப்.7, ஜீ5 *ஷர்வானந்தின் ‘நாரி நாரி நடுமா முராரி ‘: பிப்.4, அமேசான் பிரைம் * ‘The Investigation of Lucy Letby’: பிப்.4, நெட்பிளிக்ஸ்
News February 4, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால்
▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: மடியின்மை
▶குறள் எண்: 601
▶குறள்:
குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும்.
▶பொருள்: ஒருவனிடம் சோம்பல் என்னும் இருள் நெருங்கினால் அவன் பிறந்த குடும்பமாகிய அணையாத விளக்கு ஒளி மங்கி அழிந்து போகும்.
News February 4, 2026
ஜல்ஜீவன் திட்டம்.. நிதியை நிறுத்திய மத்திய அரசு

ஜல்ஜீவன் திட்டத்தில் மீதமுள்ள பணிகளுக்கான நிதியை நிறுத்துவதாக ராஜ்ய சபாவில் மத்திய அரசு கூறியுள்ளது. 2019-ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு ₹2.09 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டதாகவும், 81.5% பணிகள் நிறைவுபெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஜல்ஜீவன் திட்டப் பணிகள் முறையாக நடக்கவில்லை என குறிப்பிட்டுள்ள மத்திய அரசு, மீதமுள்ள பணிகளுக்கான செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என கூறியுள்ளது.


