News April 23, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Similar News

News March 4, 2026

பழி போட்டு முடக்க பார்க்கிறார்கள்: விஜய்

image

சமீபகாலமாக விஜய்யை சுற்றி பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன. இதற்கு பின்னணியில் திமுக இருப்பதாக தவெகவினர் சொல்கின்றனர். இதற்கு தஞ்சை கூட்டத்தில் மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய், தன்னை முடக்கிவிடலாம் என எண்ணி தொடர்ந்து தன்மீது சிலர் பழி போடுவதாக பேசியுள்ளார். மேலும், இந்த விஜய்யை முடக்கிவிடலாம் எனவும் ஆனால் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள விஜய்யை எப்படி முடக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 4, 2026

திருச்சி ரயில்வே அலுவலகத்தில் இந்தி.. சு.வெங்கடேசன் எதிர்ப்பு

image

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தில் நுழைவு வாயிலுக்கு ‘கர்தவ்ய த்வார்’ என இந்தியில் பெயர் வைத்துள்ளதற்கு சு.வெங்கடேசன் MP கண்டனம் தெரிவித்துள்ளார். ‘கர்தவ்ய த்வார்’ என்றால் தமிழில் ‘கடமையின் நுழைவுவாயில்’ என்று பொருள் என குறிப்பிட்ட அவர், பாஜக அரசின் தற்போதைய ஒரே கடமை இந்தி திணிப்பு மட்டுமே என்றும் விமர்சித்துள்ளார். மேலும், தமிழில் பெயர் சூட்டவும் வலியுறுத்தியுள்ளார்.

News March 4, 2026

சர்ச்சை விவகாரம்.. முதல் முறையாக விஜய் பேசினார்

image

தஞ்சை தவெக நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் ‘ஜன நாயகன்’ பட சென்சார் சர்ச்சை குறித்து முதல்முறையாக விஜய் மௌனம் கலைத்துள்ளார். கரூர் விவகாரம் முதல் ஜன நாயகன்’ வரை தன்மீது பழி மேல் பழி போடப்படுவதாக விஜய் தெரிவித்துள்ளார். மேலும், ‘ஜன நாயகன்’ ரிலீஸ் பிரச்னையில் தனக்காக ஆதரவாக குரல் கொடுத்தவர்களுக்கும், முக்கியமாக பூசி மெழுகி குரல் கொடுத்த CM ஸ்டாலினுக்கும் நன்றி எனவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!