News April 23, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News February 20, 2026
ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 31 காசுகள் சரிந்து ரூ.90.99 ஆக இன்று நிலைபெற்றது. டாலரின் வலுவான நிலை, தீவிரமடைந்து வரும் அமெரிக்க – ஈரான் பதற்றங்கள், கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் ரூபாய் மதிப்பு சரிவுக்கு முக்கிய காரணம். ரூபாய் மதிப்பு சரிவதால், இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பெட்ரோல், எண்ணெய், தங்கம் போன்ற பொருள்களின் விலை அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
News February 20, 2026
பட்டா தொலைந்துவிட்டதா? இதை செய்யுங்க!

குறிப்பிட்ட நிலம், வீடு, வீட்டுமனை ஒருவருக்கு சொந்தம் என்பதற்கான அரசு ஆவணம் பட்டா. அது தொலைந்து விட்டால், முதலில் தாசில்தாரிடம் புகார் வழங்க வேண்டும். பின்னர், நகல் பட்டா பெறுவதற்கான விண்ணப்பத்தில், பட்டா எண், அடிப்படை தகவல்களை பூர்த்தி செய்து அளிக்கவேண்டும். அதனை, அவர் VAO மற்றும் வருவாய் ஆய்வாளருக்கு அனுப்புவார். விசாரணைக்கு பிறகு, மனு மீது ஒப்புதல் பெறப்பட்டு நகல் பட்டா அளிக்கப்படும்.
News February 20, 2026
பொது மயானத்தை மறுப்பதும் தீண்டாமையே: சென்னை HC

பொது மயானத்தை பட்டியலினத்தவர் பயன்படுத்த அனுமதி மறுப்பதும் தீண்டாமைக்கு சமமே என சென்னை HC தெரிவித்துள்ளது. ஈரோடு கருமாண்டி செல்லிப்பாளையத்தில் வண்டிப்பாதை நிலத்தை மயானமாக மாற்றக் கோரி கிராமத்தினர் தொடர்ந்த வழக்கின் விசாரணையில் இக்கருத்தை சென்னை HC கூறியுள்ளது. கண்ணியத்துடன் வாழும் உரிமை அனைவருக்கும் உள்ளது போல, இறந்தவர்களுக்கு கண்ணியமாக இறுதிச்சடங்கு செய்யவும் உரிமை உள்ளது என குறிப்பிட்டுள்ளது.


