News April 23, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Similar News

News February 14, 2026

மகளிருக்கு ₹5000.. சர்ப்ரைஸ் கொடுக்க இதுதான் காரணமா?

image

மகளிருக்கு ₹5000-ஐ முன்னரே அறிவிக்காமல் சர்ப்ரைஸாக கொடுத்ததற்கான காரணத்தை அமைச்சர் ரகுபதி விளக்கியுள்ளார். இதை அறிவித்துவிட்டு செய்திருந்தால், எதிர்கட்சியினர் உடனே நீதிமன்றத்துக்குச் சென்று தடை உத்தரவு வாங்கிவிடுவார்கள் என அவர் கூறியுள்ளார். இதனால் மக்களுக்கு கிடைக்கக்கூடிய ₹5,000 -ம் கிடைக்காமல் போய்விடும் என்ற அவர், எனவேதான் எதையும் அறிவிக்காமல் CM அதிகாலையிலேயே சர்ப்ரைஸ் கொடுத்தார் என்றார்.

News February 14, 2026

முன்னாள் அமைச்சர் காலமானார்

image

முன்னாள் மத்திய இணையமைச்சர் (ரயில்வே, வேளாண்) கன்ஹு சரண் லெங்கா (86) வயதுமூப்பு காரணமாக காலமானார். ஒடிசாவின் காங்., முகமாக அறியப்பட்ட இவர், அக்கட்சி பிரிந்தபோது இந்திரா காந்தியின் நம்பிக்கை முகமாக இருந்தார். நரசிம்ம ராவ் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்ற கன்ஹு, மாநில அமைச்சராகவும் இருந்துள்ளார். இவரது மறைவுக்கு ஒடிசா CM, பாஜக & காங்., தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News February 14, 2026

தவெகவுக்கு ஊர்க்காவல் படை திடீர் ஆதரவு.. ஏன்?

image

ஊர்க்காவல் படையினருக்கு பணி நாள்கள் அதிகரிக்கப்பட்டு, சம்பளமும் உயர்த்தப்படும் என 2021 தேர்தலில் அளித்த வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. இந்நிலையில், வேலை நாள்களை 15-லிருந்து 25, 1 நாள் சம்பளத்தை ₹560-லிருந்து ₹1,000 ஆகவும் உயர்த்தும் கோரிக்கையை தவெக, தனது தேர்தல் வாக்குறுதியில் இடம்பெறச் செய்தால், அவர்களுக்கு ஆதரவளிக்க உள்ளதாக 16,500 ஊர்க்காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!