News April 23, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News February 28, 2026
விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

திருவெண்ணெய்நல்லூர் அருகே டி.எடையார் பகுதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து, திருமணம் செய்வதாக கூறி உல்லாசம் அனுபவித்த விஜய்கிருஷ்ணன் (29), பின்னர் அவரை ஏமாற்றி ஜாதி பெயரைச் சொல்லி திட்டியுள்ளார். இதுகுறித்த வழக்கை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விஜய்கிருஷ்ணனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.15,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.அவர் தற்போது கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
News February 28, 2026
மாம்பழம் சின்னத்தை முடக்குங்கள்: ராமதாஸ்

பாமகவின் மாம்பழம் சின்னத்தை முடக்க வேண்டும் என்று ராமதாஸ் ECI-யிடம் கோரிக்கை விடுத்துள்ளார். பாமக அங்கீகாரமற்ற கட்சி என்பதால், இதில் பதவியில் இருப்பவரின் காலத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் ECI-க்கு இல்லை என்றும், இருதரப்பினரிடையே உள்ள பிரச்னை தீர்க்கப்படும் வரை சின்னத்தை முடக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். கட்சி யாருக்கு என ராமதாஸ் – அன்புமணி இடையே போராட்டம் நடந்து வருகிறது.
News February 28, 2026
25 இடங்களில் சசிகலா தரப்பு போட்டியா?

சசிகலா டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் 20 முதல் 25 வேட்பாளர்களை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளாராம். குறிப்பாக, திடீர் சாம்பார், திடீர் இட்லி என்று விமர்சித்த டிடிவி மற்றும் அமமுகவினருக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தி தோற்கடிப்பதற்கு மிகப்பெரிய வியூகம் வகுத்துள்ளாராம். EPS மற்றும் டிடிவி எந்த காலத்திலும் வெற்றி பெறக் கூடாது என நெருக்கமானவர்களிடம் சசிகலா பேசி வருவதாக கூறப்படுகிறது.


