News April 23, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை MET வெளியிட்டுள்ளது. அதன்படி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை & குமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News February 25, 2026
இளம் வாக்காளர்களை ஈர்க்கும் தவெக: கிரிஷ் சோடங்கர்

தவெகவை மக்களை ஏற்கிறார்களா, இல்லையா என்பது தேர்தல் முடிவில் தான் தெரியவரும் என்று கிரிஷ் சோடங்கர் தெரிவித்துள்ளார். தனக்கு வரும் தரவுகளின் அடிப்படையில் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் இளைஞர்கள் தவெகவால் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும், இது தங்களது கவனத்தை பெற்றிருப்பதாகவும் கூறினார். இத்தகைய பேச்சுகள் மூலம் தவெகவுடனான கூட்டணி ஆப்ஷனையும் காங்கிரஸ் வைத்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News February 25, 2026
நல்லகண்ணு மறைந்தார்.. மருத்துவமனை அறிக்கை

மூத்த தலைவர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் உயிரிழந்துள்ள நிலையில், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து ராஜீவ் காந்தி அரசு ஹாஸ்பிடல் அறிக்கை வெளியிட்டுள்ளது. இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததாகவும், அனைத்து உடலுறுப்புகளும் செயல் இழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 1.55 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
News February 25, 2026
வெரைட்டி வெரைட்டியா வடை சுடும் EPS: CM ஸ்டாலின்

₹15 லட்சம் தருவேன் என ஒரு காலத்தில் PM மோடி வடை சுட்டதை போல, தற்போது EPS வெரைட்டி வெரைட்டியாக வடை சுடுகிறார் என அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை CM ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மீனவர்கள் கைதுக்கு எப்போது விடிவுகாலம் வரும், வெளியுறவுத் துறை யார் கண்ட்ரோலில் உள்ளது என கேட்ட அவர், PM மோடி இதற்கெல்லாம் பதில் சொல்வாரா என கேட்டுள்ளார். மேலும், பாஜகவுக்கு கிடைத்த சரியான ஆள் தான் EPS எனவும் பேசியுள்ளார்.


