News April 2, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News February 19, 2026
விழுப்புரம்: விவசாயிகள் குறை தீர்க்கும் முகாம்

விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் சரமாரியாக புகார்களை வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விவசாயம் சார்ந்த பிரச்னைகள், கோரிக்கைகள் முன்வைப்பதற்கு மாதந்தோறும் விழுப்புரம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த மாதத்திற்கான கூட்டம், விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று(பிப்.18) நடைபெற்றது.
News February 19, 2026
நடப்பு டி20 WC தொடரில் இமாலய சாதனை!

ஒரே உலகக்கோப்பை தொடரில் 3 சதங்கள் முதல்முறையாக அடிக்கப்பட்டு சாதனையாக பதிவாகியுள்ளது. நடப்பு டி20 WC-ல் இலங்கையின் பதும் நிசாங்கா(100), கனடாவின் யுவராஜ் சம்ரா (110), பாகிஸ்தானின் சஹிப்சதா பர்ஹான்(100) ஆகியோர் சதம் கண்டுள்ளனர். இதற்கு முன்பு எந்த டி20 WC தொடரிலும் 2 சதத்துக்கு மேல் பதிவானதில்லை. இந்நிலையில் நடப்பு தொடரில் இன்னும் 19 ஆட்டங்கள் மீதமுள்ளதால், மேலும் கூடுதல் சதங்களை எதிர்பார்க்கலாம்.
News February 19, 2026
L வடிவ மேம்பாலமா? W பள்ள மேம்பாலமா? அன்புமணி

சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் அண்மையில் திறக்கப்பட்ட<<19147672>> L வடிவ மேம்பாலம் <<>>மிக மோசமான தரத்தில் அமைக்கப்பட்டிப்பதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். அதில் பயணிக்கும் போது W வடிவத்தில் அமைக்கப்பட்ட பாலத்தில் பயணித்த உணர்வு தான் ஏற்பட்டதாகவும், ₹61 கோடி மதிப்பீட்டில் மக்கள் பணத்தைக் கொட்டி அப்பாலத்தை கட்டியதில் ஊழல்கள் நடந்ததா என்பது குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.


