News April 2, 2025
அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
Similar News
News March 21, 2026
அன்புமணிக்கு ஆட்டம் காட்ட தயாரான ராமதாஸ்!

அதிமுக கூட்டணியில் அன்புமணியை வீழ்த்தவே <<19435845>>சசிகலாவுடன் ராமதாஸ்<<>> கைகோர்த்துள்ளதாக பேசப்படுகிறது. குறிப்பாக தருமபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பாமக(அன்புமணி) வேட்பாளர்களை தோல்வியடைய வைக்கும் நோக்கில், அன்புமணியால் பதவியை இழந்தவர்களுக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். பலம் வாய்ந்த வேட்பாளர்களை இறக்கினால் அன்புமணி தரப்புக்கு தலைவலியாக மாற வாய்ப்புள்ளதாம். நீங்க என்ன சொல்றீங்க?
News March 21, 2026
மீண்டும் அதிமுகவில் இணைந்தனர்.. ஓபிஎஸ் ஷாக்

திமுகவில் OPS இணைந்ததால் அதிருப்தியடைந்த அவரது ஆதரவாளர்கள் பலர் அதிமுகவிற்கு திரும்புகின்றனர். அந்த வகையில், சிவகங்கை மாவட்ட OPS அணியின் நகர செயலாளர் சேகர் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். ஒன்றிய செயலாளர்கள் கனகராஜா, தியாகராஜன், சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகளும் EPS-ஐ நேரில் சந்தித்து, தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தனது ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைவது OPS-க்கு கலக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
News March 21, 2026
மனைவியிடம் பிரபல நடிகர் என்ன செய்தார் தெரியுமா..!

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குரானா, தனது மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறிய செய்தி தற்போது வைரலாகி வருகிறது. நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், புரதச் சத்துக்காக மனைவியின் தாய்ப்பாலை குடித்ததாக கூறியுள்ளார். மேலும், அவரது மனைவி தாஹிரா, 7 sins of being mother என்ற புத்தகத்தை எழுதியிருந்தார். அதிலும், தனது தாய்ப்பாலை கணவர் குரானா திருடிக் குடித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


