News April 2, 2025

அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை

image

தமிழகத்தில் இரவு 10 மணி வரை மழை பெய்யவிருக்கும் மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

Similar News

News December 16, 2025

IPL AUCTION: புறக்கணிக்கப்பட்ட வீரர்கள்

image

அபுதாபியில் நடைபெற்று வரும் ஐபிஎல் மினி ஏலத்தின் முதல் செட்டில், பேட்ஸ்மென்களுக்கான ஏலம் நடந்தது. இதில் 2 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 2 உள்நாட்டு வீரர்கள் என 4 பேரை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை. ஆஸி., வீரர் ஜேக் பிரேஸர் மெக்குர்க், நியூஸி., வீரர் டெவான் கான்வே மற்றும் உள்நாட்டு வீரர்களான பிரித்வி ஷா, சர்ஃபராஸ் கான் ஆகியோர் விலை போகவில்லை.

News December 16, 2025

EPS-க்கு எதிரான புகாரில் முகாந்திரம் இல்லை: TN அரசு

image

11 மருத்துவ கல்லூரிகள் கட்டியதில் முறைகேடு நடந்ததாகவும், இதுதொடர்பாக EPS மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க CBI-க்கு உத்தரவிட கோரியும் ராஜசேகர் என்பவர் சென்னை HC-ல் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், EPS-க்கு எதிரான இப்புகாரில் முகாந்திரம் இல்லை, இப்புகார் முடித்து வைக்கப்பட்டதாகவும் TN அரசு விளக்கம் அளித்துள்ளது. இதனையடுத்து, இவ்வழக்கின் விசாரணை 4 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

News December 16, 2025

₹25.20 கோடி.. கிரீனை தட்டித் தூக்கிய KKR

image

IPL வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன 3-வது வீரர் என்ற பெருமையை கேமரூன் கிரீன் பெற்றுள்ளார். சென்னையும், கொல்கத்தாவும் அவரை வாங்குவதற்கு மல்லுக்கட்டியதால் அவரது ஏலத்தொகை ₹2 கோடியில் இருந்து ஜெட் வேகத்தில் உயர்ந்தது. ₹43.40 கோடி வைத்திருந்த போதிலும், ₹25 கோடிக்கு பிறகு ஏலம் கேட்பதை CSK நிறுத்தியது. இதையடுத்து ₹25.20 கோடிக்கு அவரை KKR ஏலம் எடுத்தது. இதனால் CSK ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

error: Content is protected !!