News April 13, 2024
ராகுலின் வருகையினால் மோடியின் தூக்கம் காலி

ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகை பிரதமர் மோடியின் மொத்த பிரசாரத்தையும் காலி செய்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோவையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் பாகுபலி படத்தைப்போல பிரமாண்டமாக இருந்தது. இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்றார்.
Similar News
News December 24, 2025
உழவர்கரை நகராட்சி அதிரடி எச்சரிக்கை

உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களை முறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. மேட்டுப்பாளையத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கடந்த ஆக.14ஆம் தேதி முதல் புதன்கிழமைகள் தோறும் 9.30 – 11.30 வரை வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் ரூ.150 செலுத்தினால் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. உரிமம் இல்லாமல் நாய்களை வளர்த்தால் ரூ.2000 அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
News December 24, 2025
நிர்பயாவை போல இவரையும் மறக்க முடியாது!

நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கை யாராலும் மறக்க முடியாது. அந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக ஆஜராகி, தனது கட்சிக்காரர் குற்றம் செய்ததை நிரூபித்தால், ₹10 லட்சம் தருவதாக கூறியவர் வழக்கறிஞர் மனோஹர் லால் சர்மா (69). பெண்களுக்கு எதிரான இவரது பேச்சுக்கள் இன்று வரை விமர்சிக்கப்படுகின்றன. இவர் கடந்த வாரம் சிறுநீரக பிரச்னையால் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
News December 23, 2025
EPS இருக்கும்வரை அதிமுகவில் இணைய மாட்டேன்: OPS

EPS பெயரை சொல்லவே வெட்கமாக உள்ளதாக OPS விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகக் கூட்டத்தில் பேசிய அவர், EPS இருக்கும்வரை அதிமுகவில் இணைய மாட்டேன் என உறுதியாக கூறியுள்ளார். 11 தேர்தலில் தோல்வியை தழுவி, அதிமுகவை EPS படுபாதாளத்தில் தள்ளிவிட்டதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார். மேலும் தை பிறந்தால் வழிபிறக்கும் எனவும் தொண்டர்களிடம் கூறியுள்ளார்.


