News April 13, 2024

ராகுலின் வருகையினால் மோடியின் தூக்கம் காலி

image

ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகை பிரதமர் மோடியின் மொத்த பிரசாரத்தையும் காலி செய்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோவையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் பாகுபலி படத்தைப்போல பிரமாண்டமாக இருந்தது. இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்றார்.

Similar News

News December 15, 2025

தென்காசி: 10th தகுதி.. கூட்டுறவு சங்கத்தில் வேலை ரெடி!

image

தென்காசி மக்களே, வேளாண்மை கூட்டுறவு சங்கம் (SIMCO) சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு 52 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 வயது நிரப்பிய 10th,12th, டிப்ளமோ, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இப்பணிகளுக்கு <>இங்கு கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி: 20.1.2026. சம்பளம் ரூ.28,200 வரை வழங்கப்படும். இப்பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க.

News December 15, 2025

விவசாயிகளுக்கு உடனே இழப்பீடு வழங்குக: அன்புமணி

image

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இரு மாதங்களாகியும் இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை என்று அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். இழப்பீடு வழங்கும் விஷயத்தில் திமுக அரசு திட்டமிட்டு தாமதம் செய்வதாக சாடிய அவர், கடன் வாங்கியும், கடுமையாக உழைத்தும் வளர்த்தெடுத்த பயிர்களை இழந்து விட்டு தவிக்கும் விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு ₹40 ஆயிரம் வீதம் உடனே இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

News December 15, 2025

BJP-யையும் அரவணைப்போம், ஆனா ஒரு கன்டிஷன்: ரகுபதி

image

ஆள் இல்லாததால் அட்வான்ஸாகவே அதிமுக விருப்பமனு கேட்பதாக அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். யாரும் கட்சியை விட்டு போகக்கூடாது என்பதால் அதிமுக முந்தியுள்ளதாக அவர் கூறினார். திராவிட மாடல் ஆட்சியை ஏற்றுக்கொண்டால் எந்த கட்சியையும், ஏன் பாஜகவை கூட அரவணைப்போம் என ரகுபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், தலைவர் ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி தான் எங்களது அடுத்த தலைவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!