News April 13, 2024
ராகுலின் வருகையினால் மோடியின் தூக்கம் காலி

ராகுல் காந்தியின் ஒரு நாள் வருகை பிரதமர் மோடியின் மொத்த பிரசாரத்தையும் காலி செய்துவிட்டது என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். திருப்பூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோவையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டம் பாகுபலி படத்தைப்போல பிரமாண்டமாக இருந்தது. இந்தியாவில் ஜனநாயகம் தழைக்க I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைய வேண்டும். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்வார்கள் என்றார்.
Similar News
News January 18, 2026
நான் இருப்பதே திமுகவுக்கு மறந்துபோச்சு: சசிகலா

MGR-ஜெயலலிதா ஆட்சி மட்டும் தான் உண்மையான மக்களாட்சி என சசிகலா தெரிவித்துள்ளார். பேட்டி ஒன்றில், திமுக ஆட்சியில் வெறுமென பேச்சில் மட்டுமே மக்களாட்சி இருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை எதிரிகளே இல்லையென திமுக நினைப்பதாகவும், ஆனால் தான் இருப்பதையே அவர்கள் மறந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். விரைவில் உண்மை நிலவரத்தை அனைவரும் பார்ப்பார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 18, 2026
BREAKING: விஜய் தரப்புக்கு அடுத்த சம்மன் அனுப்பிய CBI

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான வழக்கில் தவெக வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமிக்கு CBI சம்மன் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே விஜய் உள்ளிட்ட தவெக முக்கிய நிர்வாகிகள் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். நாளையும் விஜய் ஆஜராக உள்ளார். இந்நிலையில், மீண்டும் தங்கள் தரப்புக்கே சம்மன் அனுப்பப்பட்டுள்ளதால் விஜய் தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
News January 18, 2026
மக்களே உஷார்! சத்தான கீரைகளிலும் வந்தாச்சு சிக்கல்

ஆரோக்கியமாக வாழ சத்தான உணவுகளை உண்ணுவது அவசியம். அப்படி டாக்டர்கள் அனைவராலும் பரிந்துரைக்கப்படும் ஒரு உணவு கீரைகள். ஆனால், தற்போது சத்தான உணவு என நாம் விரும்பி உண்ணும் கீரைகளில், அதிக விளைச்சலுக்காக தெளிக்கப்படும் ‘களைக்கொல்லி’ ரசாயனங்கள், மனித உயிர் மட்டுமின்றி உயிரணுக்களுக்கே சவாலாக மாறியுள்ளதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். என்ன பாதிப்பு? எப்படி தடுப்பது? என்பதை மேலே SWIPE பண்ணி பாருங்க.


