News April 14, 2024
அமலாகிறது தடைக்காலம்.. உயர்கிறது மீன்களின் விலை

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நாளை முதல் 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள். இதனால் மீன்களின் வரத்து குறையும் என்பதால் வஞ்சிரம், கடம்பா போன்ற மீன்களின் விலை கணிசமாக உயரலாம் என மீனவர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News July 11, 2025
ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்: அமெரிக்கா

ஈரானுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாமென அமெரிக்கா அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இரட்டை குடியுரிமை(ஈரான், அமெரிக்கா) வைத்துள்ளவர்கள் ஈரானுக்குள் செல்லும் போது தடுத்து நிறுத்தப்படுவதாகவும், அவர்களுடன் அமெரிக்க தூதரகம் மூலம் பேசுவதற்கு கூட அனுமதி கிடைப்பதில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக புதிதாக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News July 11, 2025
புஷ்பாவுக்கு வில்லனாகும் ஸ்ரீவள்ளி?

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் அட்லீ – அல்லு அர்ஜுன் படத்தில் மொத்தமாக 5 ஹீரோயின்கள் எனக் கூறப்படுகிறது. தீபிகா படுகோன் நடிப்பது உறுதிப்படுத்தப்பட்டு விட்ட நிலையில், லிஸ்டில் ரஷ்மிகாவின் பெயரும் அடிபடுகிறது. ஆனால், படத்தில் ஹீரோயினாக இல்லாமல், டெரரான வில்லன் ரோலில் ரஷ்மிகா நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. நெகட்டிவ் ரோலில் கலக்குவாரா ஸ்ரீவள்ளி?
News July 11, 2025
திமுக மூத்த தலைவர் மிசா மாரிமுத்து காலமானார்!

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரான மிசா அண்ணதாசன் என்கிற மாரிமுத்து உடல்நலக்குறைவால் காலமானார். திருவாரூர் மாவட்ட இலக்கிய அணித்தலைவராக இருந்த அவரது மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திமுக தொடக்க காலத்திலிருந்து கட்சிக்காகவும், கொள்கைக்காகவும் உழைத்த உன்னத மனிதர் என புகழாரம் சூட்டியுள்ளார். மாரிமுத்து மறைவுக்கு திமுகவினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP