News April 14, 2024
அமலாகிறது தடைக்காலம்.. உயர்கிறது மீன்களின் விலை

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நாளை முதல் 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள். இதனால் மீன்களின் வரத்து குறையும் என்பதால் வஞ்சிரம், கடம்பா போன்ற மீன்களின் விலை கணிசமாக உயரலாம் என மீனவர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News September 10, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு… திமுகவை சாடிய அன்புமணி

சமூகநீதியில் அக்கறை இருப்பது போல் திமுக நடிப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். கர்நாடகாவில் 2வது முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கவுள்ளதை தனது X தள பக்கத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். திமுக ஆட்சியில் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முயற்சிக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். 3 முறை வாய்ப்பு கிடைத்தும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த திமுக அரசு தவறிவிட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News September 10, 2025
இன்றைய நல்ல நேரம்

▶செப்டம்பர் 10, ஆவணி 25 ▶கிழமை: புதன்கிழமை ▶நல்ல நேரம்: 9:00 AM – 10:00 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM ▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM ▶குளிகை: 10:30 PM – 12:00 PM ▶திதி: த்ரிதியை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶பிறை: தேய்பிறை
News September 10, 2025
மதராஸிக்கு ரிவ்யூ செய்த சீமான்

‘மதராஸி’ படத்தின் சண்டை காட்சிகள் ஆங்கில படங்களுக்கு இணையாக உள்ளது என சீமான் பாராட்டியுள்ளார். ‘மதராஸி’ படம் சிவகார்த்திகேயனுக்கு இன்னொரு பரிமாணம் எனவும் இது அவருடைய திரைப்பயணத்தில் சிறந்த பதிப்பு என்றும் சீமான் தெரிவித்தார். மேலும், ஆக்ஷன் படத்திற்குள் ஒரு நல்ல காதலையும் இணைத்து சொன்ன விதம் புதிதாக இருந்தது என்று அவர் கூறினார்.