News April 14, 2024
அமலாகிறது தடைக்காலம்.. உயர்கிறது மீன்களின் விலை

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நாளை முதல் 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள். இதனால் மீன்களின் வரத்து குறையும் என்பதால் வஞ்சிரம், கடம்பா போன்ற மீன்களின் விலை கணிசமாக உயரலாம் என மீனவர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News April 28, 2025
இன்னும் அதிகப்படுத்தலாமே..!

வெயிலில் பைக் ஓட்டவே மக்கள் பயப்படுகின்றனர். குறிப்பாக, ட்ராபிக் சிக்னலில் நிற்கும் போது, தவித்து போய் விடுவார்கள். இதற்காக மாநகராட்சிகளின் சார்பில், சில இடங்களில் கிரீன் கலர் ஸ்கீரின்கள் கட்டப்பட்டுள்ளன. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்ற போதிலும், இது எங்கள் ஏரியாவிலும் கொண்டுவந்தால், நன்றாக இருக்கும் என்கிற கோரிக்கையும் அதிகமாக உள்ளது. இன்னும் எந்த ஏரியாவில் இந்த ஸ்கிரீன் வேண்டும்?
News April 28, 2025
கிடைக்குற இடத்துலலாம் Wifi கனெக்ட் பண்றீங்களா?

பொதுவாக எங்கு போனாலும், Free WiFi-யில் கனெக்ட் பண்ணும் பழக்கம் பலருக்கு உண்டு. ஆனால், அது ஆபத்தானது என மத்திய அரசின் CERT அமைப்பு எச்சரிக்கிறது. பாதுகாப்பற்ற இணைப்புகளின் மூலம் எளிதில் போனை ஹேக் செய்து, டேட்டா திருட்டு, நிதி இழப்பு போன்ற பிரச்னைகள் வரும் என CERT தெரிவிக்கிறது. அரசின் அங்கீகரிக்கப்பட்ட WiFi-கள் தவிர பிற WiFi-களை அதிகமாக பயன்படுத்த வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News April 28, 2025
இந்திய அணிக்கு மிடில் ஆர்டரில் யார் கரெக்ட் சாய்ஸ்?

T20-ல் மிடில் ஆர்டரில் யாரை களமிறக்குவது என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது. கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஸ்ரேயஸ் ஐயர் என பலர் இருக்க, இதற்கு DC-யின் கோச் கெவின் பீட்டர்சன் ஒரு தீர்வை கொடுக்கிறார். கடந்த ஆண்டை விட கே.எல்.ராகுலின் ஆட்டம் மிக சிறப்பாக முன்னேறியிருப்பதாக குறிப்பிட்டு, அவரே கரெக்ட்டான சாய்ஸ் என்றும் அவர் தெரிவித்துள்ளார். யார் கரெக்ட்டா இருப்பாங்க?