News April 14, 2024
அமலாகிறது தடைக்காலம்.. உயர்கிறது மீன்களின் விலை

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நாளை முதல் 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள். இதனால் மீன்களின் வரத்து குறையும் என்பதால் வஞ்சிரம், கடம்பா போன்ற மீன்களின் விலை கணிசமாக உயரலாம் என மீனவர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News November 22, 2025
ஓவர் டைம் வேலை செய்தால் டபுள் சம்பளம்… புதிய சட்டம்

இன்று அமலுக்கு வந்துள்ள புதிய தொழிலாளர் சட்டங்களின் படி: *பெரும்பாலான துறைகளில் பணிநேரம் 8 -12 மணிநேரம் வரை, வாரத்துக்கு 48 மணிநேரம் மிகாமல் இருக்க வேண்டும். கூடுதல் நேரம் (ஓவர் டைம்) வேலை செய்தால் இருமடங்கு சம்பளம், தேவைப்படும் சூழலில் தொழிலாளரிடம் எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறுவது கட்டாயம் *ஊதியம், பணி நேரம் உள்ளிட்ட விதிகள் இனி டிஜிட்டல் மற்றும் ஊடகப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.
News November 22, 2025
ராசி பலன்கள் (22.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 22, 2025
PM மோடி மீனவர்களை சந்திக்கவில்லை: CM ஸ்டாலின்

ராமேஸ்வரம் வரை வந்தும் தங்களை PM மோடி சந்திக்கவில்லை என்று மீனவர்கள் வருந்தியதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால், தான் கடலோர மாவட்டங்களுக்கு எப்போது வந்தாலும் மீனவர்களை சந்திப்பேன் என்றும் CM குறிப்பிட்டுள்ளார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் சந்திக்கும் இன்னல்களை தவிர்க்க மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


