News April 14, 2024
அமலாகிறது தடைக்காலம்.. உயர்கிறது மீன்களின் விலை

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நாளை முதல் 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள். இதனால் மீன்களின் வரத்து குறையும் என்பதால் வஞ்சிரம், கடம்பா போன்ற மீன்களின் விலை கணிசமாக உயரலாம் என மீனவர்கள் கூறியுள்ளனர்.
Similar News
News October 23, 2025
காடுகள் வளர்ப்பில் இந்தியா டாப்-3

காடுகள், பூமியின் நுரையீரல். அவை அழியும் போது, மனித வாழ்வின் சுவாசமும் நின்று போகிறது. இந்த காடுகளை அதிகரிப்பதில், UN அறிக்கையின்படி உலகளவில் இந்தியா 3-வது இடத்தை தக்கவைத்துள்ளது. உலக வன பரப்பு தரவரிசையில் இந்தியா ஒரு படி முன்னேறி, தற்போது 9வது இடத்தை பிடித்துள்ளது. 2025-ல் இந்தியாவின் வனப்பரப்பு 72.7 மில்லியன் ஹெக்டேராக மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் மொத்த வனப்பரப்பில் சுமார் 2% ஆகும்.
News October 23, 2025
பிரபல தமிழ் நடிகர் பங்கேற்ற நிகழ்ச்சியில் விபத்து

கோவையில் நடந்த ‘டியூட்’ பட நிகழ்ச்சியில் விபத்து ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கு வெளியான டியூட் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. படக்குழுவினர் ஒவ்வொரு பகுதியாக சென்று ரசிகர்களை சந்திக்கின்றனர். இந்நிலையில், கோவையில் நடந்த நிகழ்ச்சியில், பிரதீப் ரங்கநாதன் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது, அவரை நோக்கி இளைஞர்கள் படையெடுத்ததால், தடுப்புகள் சரிந்து விழுந்தது. இதில், சிலர் காயமடைந்துள்ளனர்.
News October 23, 2025
ஆட்சி முடியும் நேரத்தில் நாடகமாடும் CM: அண்ணாமலை

மக்கள் வரிப்பணத்தை CM ஸ்டாலின் விளம்பரங்களுக்கு வீணடித்து கொண்டிருப்பதாக அண்ணாமலை சாடியுள்ளார். சாலைகள் அமைக்க, பாலங்கள் கட்ட என ₹78,000 கோடி செலவிட்டுள்ளதாக அரசு கூறுகிறது; ஆனால் பல கிராமங்களில் இன்னும் சாலை வசதிகள் செய்யப்படவில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், நான்கரை ஆண்டுகளாக ஒன்றும் செய்யாமல், ஆட்சி முடியும் நேரத்தில், உங்களுடன் ஸ்டாலின் என்று நாடகமாடுவதாகவும் சாடியுள்ளார்.