News April 14, 2024

அமலாகிறது தடைக்காலம்.. உயர்கிறது மீன்களின் விலை

image

தமிழகத்தில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலாக உள்ளதால், மீன்களின் விலை உயர வாய்ப்புள்ளது. மீன்கள் இனப்பெருக்கத்திற்காக நாளை முதல் 61 நாள்களுக்கு மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருக்கும். இந்த காலக்கட்டத்தில் விசைப் படகு மீனவர்கள் கடலுக்குள் செல்ல மாட்டார்கள். இதனால் மீன்களின் வரத்து குறையும் என்பதால் வஞ்சிரம், கடம்பா போன்ற மீன்களின் விலை கணிசமாக உயரலாம் என மீனவர்கள் கூறியுள்ளனர்.

Similar News

News November 23, 2025

தலை சுற்ற வைக்கும் அம்பானி பள்ளியின் கட்டணம்!

image

மும்பையில் இயங்கி வரும் திருபாய் அம்பானி இண்டர்நேஷனல் ஸ்கூலில் வசூலிக்கப்படும் கட்டணம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. *Kindergarten to 7th: ₹1.70 லட்சம். * 8 -10th (ICSE): ₹1.85 லட்சம். *8- 10th (IGCSE): ₹5.9 லட்சம். * 11 – 12th (IBDP): ₹9.65 லட்சம். ஷாருக்கான், கரீனா கபூர், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்களின் குழந்தைகள் இங்குதான் படிக்கின்றனர்.

News November 23, 2025

கூட்டணி: குழப்பத்தை ஏற்படுத்தும் காங்., அறிக்கை

image

காங்., சார்பில் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்ததால், TVK உடன் கூட்டணி இல்லை என்று அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. ஆனால், காங்., வெளியிட்ட அறிக்கையில் திமுக என்றோ, இண்டியா கூட்டணி என்றோ எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. மொட்டையாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை என்று மட்டுமே குறிப்பிட்டுள்ளது. இதனால், விஜய் உடன் கூட்டணி பேச்சு தொடர்கிறதா என்ற கேள்வி எழுகிறது.

News November 23, 2025

காலையில் மாரடைப்பு.. காரணம் இதுதான்!

image

காலையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம், ஏனெனில் உடலில் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிப்பது காரணமாகிறது. இது உடலில் கார்டிசோல் மற்றும் அட்ரினலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் வெளியாவதால் ஏற்படுகிறது. இரவில் ஏற்படும் நீரிழப்பும் மாரடைப்பை தூண்டுவதற்கு ஒரு காரணமாக அமைகின்றன. முறையான தூக்கம், உடற்பயிற்சியால் இந்த ஆபத்தை தடுக்க முடியும் என டாக்டர்கள் கூறுகின்றனர். உஷாரா இருங்க..!

error: Content is protected !!