News April 3, 2025
இன்று தாய்லாந்து செல்லும் பிரதமர்

பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள, பிரதமர் மோடி இன்று தாய்லாந்து பயணம் செய்ய உள்ளார். நாளை நடைபெறும் உச்சி மாநாட்டில் நேபாள பிரதமர் சர்மா ஒலி, வங்கதேச இடைக்கால அரசு தலைவர் முகமது யூனுஸ் ஆகியோரும் பங்கேற்கின்றனர். கடல்சார் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதை பிரதமர் மோடி மேற்பார்வையிடுகிறார். பின், அங்குள்ள வாட்போ கோவிலுக்கு அந்நாட்டு பிரதமருடன் இணைந்து செல்கிறார்.
Similar News
News December 3, 2025
5 புதிய பொருள்களுக்கு புவிசார் குறியீடு PHOTOS

தமிழ்நாட்டில் மேலும் 5 புதிய பொருள்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டின் மொத்த புவிசார் குறியீடு அங்கீகாரம் பெற்ற பொருள்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது. 5 புதிய பொருட்கள் என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. தமிழகத்தின் பெருமையை SHARE பண்ணுங்க.
News December 3, 2025
ரெட் அலர்ட்.. நாளை பள்ளிகள் விடுமுறையா?

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒரே இடத்தில் மையம் கொண்டுள்ளதால், வட சென்னை, திருவள்ளூர் பகுதிகளில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சி, செங்கை மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கனமழை எச்சரிக்கையால் இன்று சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், தொடர்ந்து மழை நீடிப்பதால் நாளை விடுமுறை விட வாய்ப்புள்ளது.
News December 3, 2025
டி20 அணியில் இணைந்த சுப்மன் கில்

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. காயத்தால் ஓய்வில் இருந்த சுப்மன் கில் மற்றும் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் அணியில் இணைந்துள்ளனர். சூர்யகுமார் தலைமையிலான அணியில் கில், அபிஷேக், திலக், ஹர்திக், துபே, அக்சர், ஜிதேஷ், சஞ்சு, பும்ரா, வருண், அர்ஷ்தீப், குல்தீப், ராணா, சுந்தர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்..


