News March 29, 2024
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘விலைவாசி உயர்வால் விவசாயமும், நெசவாளர்களும் நலிவடைந்துள்ளனர். விவசாயமே தெரியாத முதல்வர் ஸ்டாலின், விவசாயம் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்கிறார்’ என விமர்சித்துள்ளார்.
Similar News
News February 16, 2026
நம்பிக்கையில்லா தீர்மானம்… மார்ச் 9-ம் தேதி ஓட்டெடுப்பு

லோக் சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சமீபத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தனர். இந்நிலையில் இதற்கான ஓட்டெடுப்பு வரும் மார்ச் 9-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓம் பிர்லா ஒருதலைபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி,118 MP-க்கள் கையெழுத்திட்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
News February 16, 2026
சுஜாதா பொன்மொழிகள்

*நேரம் ஒரு நதி போன்றது. நீங்கள் ஒரே நீரை இருமுறை தொட முடியாது. *அறிவு என்பது தெரிந்தவற்றை அடுக்கி வைப்பது அல்ல, தெரியாதவற்றைத் தேடிச் செல்வது. *பெண்களின் மெளனம் பல சமயம் சம்மதம் அல்ல, அது ஒரு பெரிய போராட்டத்தின் முடிவு. *நவீன உலகம் என்பது வசதிகளின் தொகுப்பு மட்டுமல்ல, சிக்கல்களின் தொகுப்பும்தான். *வாசிப்பு என்பது மூளைக்குச் செய்யும் உடற்பயிற்சி.
News February 16, 2026
பொய் பேசுவது ராகுலின் கொள்கை: அமித்ஷா

விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதாக ராகுல் காந்தி வைத்த குற்றச்சாட்டுக்கு அமித் ஷா பதில் அளித்துள்ளார். அதில் இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு சிறு பாதிப்பு கூட ஏற்பாடாது என அவர் கூறியுள்ளார். மேலும், ராகுல் பொய் பேசுவதை கொள்கையாக கொண்டுள்ளதாகவும், காங்கிரஸ் ஆட்சியில் வெளிநாட்டு ஒப்பந்தங்களால் விவசாயிகள் பலிகடா ஆக்கியதாகவும் சாடியுள்ளார்.


