News March 29, 2024
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘விலைவாசி உயர்வால் விவசாயமும், நெசவாளர்களும் நலிவடைந்துள்ளனர். விவசாயமே தெரியாத முதல்வர் ஸ்டாலின், விவசாயம் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்கிறார்’ என விமர்சித்துள்ளார்.
Similar News
News October 28, 2025
கேஸ் சிலிண்டர் புக் செய்வது இனி ரொம்ப ஈஸி

LPG சிலிண்டர்களை இனி ஈசியாக வாட்ஸ்அப்பிலும் புக் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள், தங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணில் இருந்து ‘HI’ அல்லது ‘Refill’ என்று மெசேஜ் செய்தாலே போதும். புக் செய்வது, டெலிவரி டிராக் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் 24 மணி நேரமும் வாட்ஸ்அப்பில் பெறலாம். பாரத் – 1800 22 4344, Indane – 75888 88824, HP- 92222 01122 என்ற எண்களில் வாட்ஸ்அப் செய்யலாம். SHARE IT.
News October 28, 2025
உலகை விட்டு மறைந்தார்

நடிகரும் பாடலாசிரியருமான கவிஞர் சினேகனின் தந்தை சிவசங்கு(102) நேற்று அதிகாலை காலமானார். தஞ்சை புது காரியாப்பட்டியில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. உறவினர்கள், கிராமத்தினர் கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து, இன்று சிவசங்குவின் உடலுக்கு குடும்பத்தினர் இறுதிச் சடங்குகள் செய்தனர். அதன்பின், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. RIP
News October 28, 2025
Aggressive அபிஷேக்கை எதிர்கொள்ள தயார்: மார்ஷ்

IND vs AUS மோதும் முதல் டி20 போட்டி நாளை தொடங்க உள்ளது. இந்நிலையில், Aggressive பேட்ஸ்மேனான அபிஷேக் ஷர்மாவை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருப்பதாக ஆஸி., கேப்டன் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். மிகவும் திறமை வாய்ந்தவர் அபிஷேக் என பாராட்டியுள்ளார். அவர் நிச்சயம் எங்களுக்கு சவாலாக இருப்பார் எனவும், இதுபோன்ற வீரர்களை எதிர்கொண்டுதான், தங்களின் திறனை பரிசோதிக்க முடியும் என்றும் மார்ஷ் கூறியுள்ளார்.


