News March 29, 2024
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவில்லை

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘விலைவாசி உயர்வால் விவசாயமும், நெசவாளர்களும் நலிவடைந்துள்ளனர். விவசாயமே தெரியாத முதல்வர் ஸ்டாலின், விவசாயம் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்கிறார்’ என விமர்சித்துள்ளார்.
Similar News
News September 18, 2025
கூட்டணியா? சற்றுநேரத்தில் மனம் திறக்கிறார் இபிஎஸ்

அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து EPS இன்று விளக்கமளிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. OPS, TTV உள்ளிட்டோரை NDA கூட்டணியில் இணைக்க அவர் சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதுகுறித்தும், செங்கோட்டையன் விவகாரம் குறித்தும் விளக்கம் அளிக்கலாம். அவரின் செய்தியாளர் சந்திப்புக்கு பின்புதான், கூட்டணி குறித்து அதிமுகவின் நிலைபாடு என்ன என்பது தெரியவரும் என்பதால், எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
News September 18, 2025
மீண்டும் தள்ளிப்போகிறதா தனி ஒருவன்-2?

தனி ஒருவன்-2 படத்துக்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நிலையில், தனி ஒருவன்-1 ஐ தயாரித்த AGS நிறுவனத்திடமே 2-ம் பாகத்திற்கான கதையையும் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மோகன்ராஜா. ஆனால் அர்ச்சனா கல்பாத்தியோ, இது சரியான நேரமில்லை என கூறியிருக்கிறார். தனி ஒருவன்-1 வந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், 2ம் பாகம் வருவது டவுட்தான் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.
News September 18, 2025
RECIPE: ஹெல்தியான மாப்பிள்ளை சம்பா லட்டு!

மாப்பிள்ளை சம்பாவில் துத்தநாகம், நார்ச்சத்து இருப்பதால், நரம்பு மண்டலத்தை வலுப்பெற செய்து, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. ஆண்களுக்கு மாப்பிள்ளை சம்பா மிகவும் நல்லது என கூறப்படுகிறது.
*மாப்பிள்ளை சம்பா அரிசியை மிதமான தீயில், நன்கு வறுத்து, மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
*இதில், பொடித்த வெல்லம் & ஏலக்காய் தூள் &நெய் சேர்த்து, லட்டு பிடித்தால், மாப்பிள்ளை சம்பா லட்டு ரெடி. SHARE.