News April 25, 2025

போப் இறுதிச் சடங்கில் பங்கேற்கும் குடியரசுத் தலைவர்

image

போப் ஆண்டவரின் இறுதிச் சடங்கில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவுள்ளதாக வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. உடல்நலக் குறைவால் காலமான போப் பிரான்சிஸ் உடல் நாளை (ஏப்.26) இறுதி மரியாதையுடன் அடக்கம் செய்யப்படவுள்ளது. இதில், பங்கேற்க வாடிகன் நகருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இன்று செல்லவுள்ளார் என வெளியுறவுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 23, 2025

தேனி: நாயால் உயிரிழந்த மின் ஊழியர்

image

வடபுதுப்பட்டியை சேர்ந்த ரஞ்சித் (30) போடி மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றினார். இவர் போடியில் இருந்து டூவீலரில் தேனி நோக்கி சென்றுள்ளார். தனியார் மில் அருகே சென்ற போது சாலையின் குறுக்கே நாய் சென்றதால் ரஞ்சித் திடீனெ பிரேக் பிடித்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவ்விபத்து குறித்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

News November 23, 2025

சர்வதேச விழாவில் ராணுவத்தை பெருமைப்படுத்திய SRK

image

மும்பையில் நடந்த சர்வதேச அமைதி விருதுகள் விழாவில், மும்பை (26/11), பஹல்காம், டெல்லி தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு ஷாருக்கான் அஞ்சலி செலுத்தினார். பின்பு, பாதுகாப்பு படையினரை குறிப்பிட்டு, நீங்கள் என்ன செய்கிறீர்கள் என யாராவது கேட்டால், நாட்டை பாதுகாக்கிறேன் என்று சொல்லுங்கள்; என்ன சம்பாதிக்கிறீர்கள் என்று கேட்டால், 140 கோடி மக்களின் ஆசிர்வாதங்களை சம்பாதிக்கிறேன் என்று சொல்லுங்கள் என்றார்.

News November 23, 2025

மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தல்

image

வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதால், நாளைக்குள் மீனவர்கள் கரை திரும்ப வேண்டும் என்று IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. இது வரும் 26-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதால், அந்தமான் கடல்பகுதிகளுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.

error: Content is protected !!