News October 12, 2025
6 மாவட்டங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்!

TN-ல் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சை, நெல்லை, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 6 மாவட்டங்களில் மத்திய அரசு சார்பில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடக்கின்றன. அரசு நகர்ப்புற, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு ஹாஸ்பிடல்கள் உள்பட பல்வேறு இடங்களில் இந்த முகாம்கள் காலை 9.15 மணிக்கு தொடங்குகின்றன. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட மறந்துவிடாதீர்கள். SHARE IT.
Similar News
News October 12, 2025
Power Bank-ஆல் போன் பேட்டரிக்கு பாதிப்பா?

போன்களை சார்ஜ் செய்ய 5V Input voltage தேவை. போனுக்கு ஏற்றவாறு வோல்டேஜ் வழங்கும் வகையில் தரமான Power bank-கள் வடிவமைக்கப்பட்டிருக்கும் . அதனால், பேட்டரிகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாது. இருந்தாலும், பவர் பேங்க் சார்ஜில் இருக்கும்போது போன்களை சார்ஜ் செய்வது, பவர் பேங்க் உடன் வழங்கப்பட்ட கேபிளை பயன்படுத்தாமல், வேறு கேபிளை பயன்படுத்துவது போன்ற தவறுகளை செய்யாதீங்க. SHARE IT.
News October 12, 2025
RECIPE: சுவையான பால் கேசரி ரெசிபி!

*முதலில் ரவையை பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள் *வாணலியில் பாலைக்காய்ச்சி கொதித்து வந்தவுடன் ரவையை சேர்த்து கிளற வேண்டும் *ரவை நன்றாக வெந்த பிறகு, அதில் சர்க்கரை, சிறிதளவு குங்குமப்பூ ஆகியவற்றை சேர்த்து கிளறுங்கள் *கேசரி பதத்திற்கு வந்ததும் ஏலக்காய், நெய்யில் வறுத்த முந்திரி ஆகியவற்றை சேர்த்து இறக்கினால் சுவையான பால் கேசரி தயார். SHARE IT.
News October 12, 2025
அதிமுகவில் போர்க்கொடி தூக்கும் மாஜிக்கள்?

செங்கோட்டையன் போட்ட வெடி நமத்து போய்விட்டது என இப்போதுதான் பெருமூச்சுவிட்டார் EPS. அதற்குள், மாவட்டங்களை தங்கள் வசம் வைத்திருக்கும் மாஜிக்கள் அவரை குடைய ஆரம்பித்துவிட்டதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் உள்ள தொகுதிகளில், தாங்கள் கைகாட்டும் நபர்களுக்கே சீட் வழங்கணும் என அவர்கள் கூறுகிறார்களாம். ஆனால், அது தன்னுடைய முடிவு என்பதில் EPS தெளிவாக இருப்பதாக கூறப்படுகிறது.